கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ளது.
இதன்படி, முந்தைய இரண்டு காலாண்டுகளைக் காட்டிலும் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதாக தெரியவருகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்படி, 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.9% உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.6% சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு கொரோனா பாதிப்பு மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி 2021-22ஆம் நிதியாண்டில் ஜிடிபி சுமார் 236.44 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2020-21ஆம் ஆண்டில் ஜிடிபி 198 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5.4% உயர்ந்துள்ளது. எனினும், இது முந்தைய இரண்டு காலாண்டுகளை ஒப்பிடுகையில் குறைவாகும். இந்தியப் பொருளாதாரம் தற்போது புது பிரச்சினைகளை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் ரஷ்யா ராணுவத் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு சரக்குகளின் விலை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பணவீக்கமும் அதிகரித்துள்ளது. ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதன் தாக்கல் இந்தியப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, முந்தைய இரண்டு காலாண்டுகளைக் காட்டிலும் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதாக தெரியவருகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்படி, 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.9% உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.6% சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு கொரோனா பாதிப்பு மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி 2021-22ஆம் நிதியாண்டில் ஜிடிபி சுமார் 236.44 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2020-21ஆம் ஆண்டில் ஜிடிபி 198 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5.4% உயர்ந்துள்ளது. எனினும், இது முந்தைய இரண்டு காலாண்டுகளை ஒப்பிடுகையில் குறைவாகும். இந்தியப் பொருளாதாரம் தற்போது புது பிரச்சினைகளை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் ரஷ்யா ராணுவத் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு சரக்குகளின் விலை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பணவீக்கமும் அதிகரித்துள்ளது. ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதன் தாக்கல் இந்தியப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.