தமிழகத்தில் அரவக்குறிச்சியைத் தொடர்ந்து தஞ்சாவூரிலும் இன்று நடக்கவிருந்த தேர்தல் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல் புகாரைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில் தேர்தல் தேதியை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து கடந்த சனிக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மற்றொரு தொகுதியான தஞ்சாவூரிலும் தேர்தல் விதி மீறல் புகார்களைத் தொடர்ந்து, மே 23-ஆம் தேதிக்கு தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளிவைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்த இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
மாவட்டத் தேர்தல் அதிகாரி, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோர் அனுப்பிய பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர் தொகுதியில் முக்கியக் கட்சிகள் வரிசையில் அதிமுக சார்பில் ரங்கசாமி, திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் இந்த இருகட்சிகளுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல் புகாரைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில் தேர்தல் தேதியை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து கடந்த சனிக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மற்றொரு தொகுதியான தஞ்சாவூரிலும் தேர்தல் விதி மீறல் புகார்களைத் தொடர்ந்து, மே 23-ஆம் தேதிக்கு தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளிவைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்த இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
மாவட்டத் தேர்தல் அதிகாரி, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோர் அனுப்பிய பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர் தொகுதியில் முக்கியக் கட்சிகள் வரிசையில் அதிமுக சார்பில் ரங்கசாமி, திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் இந்த இருகட்சிகளுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.