கடலூர் அருகே கொளுந்தனுடன் ஏற்பட்ட தகாத உறவால் மனைவியே, கணவனை கொலை செய்து வீட்டுத் தோட்டத்தில் புதைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் துறைமுகம் அடுத்த சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த தம்பதி முருகதாஸ்- சுமிதா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முருகதாஸ் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று விட்டார். அப்போது முருகதாசின் தம்பி சுமேருக்கு, சுமிதாவுடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தகாத உறவில் இருந்த வந்தனர்.
இந்நிலையில் சுமிதாவின் தம்பி திருமணத்திற்காக முருகதாஸ் சவுதி அரேபியாவில் இருந்து சிங்காரத்தோப்பிற்க்கு வந்தபோது, தம்பியுடன் மனைவி கள்ள தொடர்பில் இருப்பதை அறிந்து இருவரையும் கண்டித்தார். இதனால் சுமேரும், சுமிதாவும் சேர்ந்து முருகதாசை கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு இருவரும் தலைமறைவாகினர்.
மகன் வெளிநாடு வேலைக்கு சென்று இருப்பதாக நினைத்து இருந்த, முருகதாஸின் பெற்றோர், அவரது பாஸ்போர்ட் விட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தாய் புவுணாம்பாள் அளித்த புகரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சுமேர், சுமிதாவை தேடி வந்தனர். இதையடுத்து இருவரும் திருவனந்தபுரத்தில் இருப்பதை அறிந்த போலீசார், அவர்களை கடலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முருகதாஸை கொலை செய்து வீட்டுத் தோட்டத்தில் புதைத்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். புதைத்த இடத்தை அடையாளம் காட்டியதையடுத்து அந்த இடத்தில் வருவாய் துறை மற்றும் போலீசார் முன்னிலையில் தோண்டி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் துறைமுகம் அடுத்த சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த தம்பதி முருகதாஸ்- சுமிதா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முருகதாஸ் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று விட்டார். அப்போது முருகதாசின் தம்பி சுமேருக்கு, சுமிதாவுடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தகாத உறவில் இருந்த வந்தனர்.
இந்நிலையில் சுமிதாவின் தம்பி திருமணத்திற்காக முருகதாஸ் சவுதி அரேபியாவில் இருந்து சிங்காரத்தோப்பிற்க்கு வந்தபோது, தம்பியுடன் மனைவி கள்ள தொடர்பில் இருப்பதை அறிந்து இருவரையும் கண்டித்தார். இதனால் சுமேரும், சுமிதாவும் சேர்ந்து முருகதாசை கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு இருவரும் தலைமறைவாகினர்.
மகன் வெளிநாடு வேலைக்கு சென்று இருப்பதாக நினைத்து இருந்த, முருகதாஸின் பெற்றோர், அவரது பாஸ்போர்ட் விட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தாய் புவுணாம்பாள் அளித்த புகரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சுமேர், சுமிதாவை தேடி வந்தனர். இதையடுத்து இருவரும் திருவனந்தபுரத்தில் இருப்பதை அறிந்த போலீசார், அவர்களை கடலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முருகதாஸை கொலை செய்து வீட்டுத் தோட்டத்தில் புதைத்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். புதைத்த இடத்தை அடையாளம் காட்டியதையடுத்து அந்த இடத்தில் வருவாய் துறை மற்றும் போலீசார் முன்னிலையில் தோண்டி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.