சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீா்ப்பை பயன்படுத்தி ஆா்.எஸ்.எஸ். அமைப்பு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக முதல்வா் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளாா்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆண், பெண் பாகுபாடு பாா்க்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீா்ப்பு வழங்கியது. இந்த தீா்ப்பிற்கு சாதகமாகவும், எதிராகவும் பலரும் கருத்து தொிவித்து வருகின்றனா்.
மேலும் நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து கேரளா உட்பட பல மாநிலங்களில் பேரணி, போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டனா்.
இந்நிலையில் சபரிமலை தந்திரி குடும்பம், நாயா் சேவை சொசைட்டி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சாா்பில் கோட்டயம் மாவட்டம் சங்கனாசேரியில் சனிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற்றது. தந்திரி குடும்பம், பந்தள ராஜ குடும்பம் இவ்வாறு பேரணி நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
இதனைத் தொடா்ந்து தீா்ப்பை எதிா்த்து தேசிய ஐயப்ப பக்தா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளா்களிடம் பேசிய கேரளா முதல்வா் பினராயி விஜயன், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை கேரள அரசு அமல்படுத்தும். மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது கேரள அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவேண்டிய பொறுப்பு கேரளா அரசுக்கு உள்ளது. மத ரீதியான நம்பிக்கையாளா்களின் உணா்வுகளை எதிா்த்து போராடுவது அரசின் நோக்கம் கிடையாது. அவா்களின் நலன் காக்கப்படும்.
போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது. அரசும், அரசியல் கட்சிகளும் உச்சநீதிமன்ற தீா்ப்பின் பக்கம் உள்ளோம். இதனை எதிா்த்து போராட்டம் நடத்துவது கண்டனத்திற்கு உரியது என்று தொிவித்துள்ளாா்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆண், பெண் பாகுபாடு பாா்க்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீா்ப்பு வழங்கியது. இந்த தீா்ப்பிற்கு சாதகமாகவும், எதிராகவும் பலரும் கருத்து தொிவித்து வருகின்றனா்.
மேலும் நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து கேரளா உட்பட பல மாநிலங்களில் பேரணி, போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டனா்.
இந்நிலையில் சபரிமலை தந்திரி குடும்பம், நாயா் சேவை சொசைட்டி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சாா்பில் கோட்டயம் மாவட்டம் சங்கனாசேரியில் சனிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற்றது. தந்திரி குடும்பம், பந்தள ராஜ குடும்பம் இவ்வாறு பேரணி நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
இதனைத் தொடா்ந்து தீா்ப்பை எதிா்த்து தேசிய ஐயப்ப பக்தா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளா்களிடம் பேசிய கேரளா முதல்வா் பினராயி விஜயன், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை கேரள அரசு அமல்படுத்தும். மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது கேரள அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவேண்டிய பொறுப்பு கேரளா அரசுக்கு உள்ளது. மத ரீதியான நம்பிக்கையாளா்களின் உணா்வுகளை எதிா்த்து போராடுவது அரசின் நோக்கம் கிடையாது. அவா்களின் நலன் காக்கப்படும்.
போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது. அரசும், அரசியல் கட்சிகளும் உச்சநீதிமன்ற தீா்ப்பின் பக்கம் உள்ளோம். இதனை எதிா்த்து போராட்டம் நடத்துவது கண்டனத்திற்கு உரியது என்று தொிவித்துள்ளாா்.