சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவவ் உதவி ஆய்வாளர் கணேஷ், தலைமை காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதில்," சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கின்றோம் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது.
எங்களுக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகள் அனைத்துக்கும் கட்டுப்படுவோம் என்றும் ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் பெயரில் மக்களின் உணர்வோடு விளையாடுகிறார்கள்: நீதிபதிகள் காட்டம்
இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவோம். வழக்கில் கைது செய்யப்பட்டு 130 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன் பார்க்கப்படுகின்றனர். இவர்கள்தான் தந்தை மகன் இருவரையும் மிருகத்தனமாக தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். மேலும் காவலர் ரேவதி கொடுத்த வாக்குமூலத்தில் இவர்களின் பங்கு முக்கியமானது என தெரியவருகிறது.
மேலும் சிபிஐ விசாரணையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். குறிப்பாக இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நவம்பர் 11ஆம் தேதி கீழமை நீதிமன்றத்தில் துவங்க உள்ளது. எனவே குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
கிசான் திட்ட முறைகேடு... மதுரை கலெக்டரின் 'லேட்'டான முடிவு!
'புகார் அடிப்ப்டையிலேயே வழக்கு பதியப்பட்டுள்ளது' என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், காவல் நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்து புகார்களுக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுகிறதா?
அப்படி இருந்தால் FIR பதிவு செய்ய கோரி பலர் ஏன் நீதிமன்றம் வருகிறார்கள்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து, வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
அதில்," சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கின்றோம் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது.
எங்களுக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகள் அனைத்துக்கும் கட்டுப்படுவோம் என்றும் ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் பெயரில் மக்களின் உணர்வோடு விளையாடுகிறார்கள்: நீதிபதிகள் காட்டம்
இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவோம். வழக்கில் கைது செய்யப்பட்டு 130 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன் பார்க்கப்படுகின்றனர். இவர்கள்தான் தந்தை மகன் இருவரையும் மிருகத்தனமாக தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். மேலும் காவலர் ரேவதி கொடுத்த வாக்குமூலத்தில் இவர்களின் பங்கு முக்கியமானது என தெரியவருகிறது.
மேலும் சிபிஐ விசாரணையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். குறிப்பாக இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நவம்பர் 11ஆம் தேதி கீழமை நீதிமன்றத்தில் துவங்க உள்ளது. எனவே குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
கிசான் திட்ட முறைகேடு... மதுரை கலெக்டரின் 'லேட்'டான முடிவு!
'புகார் அடிப்ப்டையிலேயே வழக்கு பதியப்பட்டுள்ளது' என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், காவல் நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்து புகார்களுக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுகிறதா?
அப்படி இருந்தால் FIR பதிவு செய்ய கோரி பலர் ஏன் நீதிமன்றம் வருகிறார்கள்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து, வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.