தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தருமபுரிக்கு வருகை புரிந்தார். கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சசிகலா விடுதலை ஆகிறார்; அவர் பூரண குணமடைந்து வரவேண்டும். ஒரு பெண்மணியாக அவருக்கு என்னுடைய ஆதரவு உண்டு.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல; அதிமுகவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வெளியிட்ட அறிக்கையை பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்துகின்றனர். அதேபோல் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் நல்ல பல திட்டங்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வைத்துள்ளார். அவற்றை அவர் விரைவில் அறிவிப்பார்.
தேசியக்கொடி ஏற்றிய தூய்மைப் பணியாளர்... ஊராட்சித் தலைவருக்கு பாராட்டு
நடிகர் கமல்ஹாசன் சொன்னதுபோலவே கட்சி ஆரம்பித்து தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு மக்களின் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளதென்பது இந்த தேர்தலின் முடிவில் தெரியவரும்.
நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் செயல்பட்டு வருகிறோம். எனவே கூட்டணி குறித்து காலதாமதம் செய்யாமல் விரைவில் அறிவிக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டது.
அதேபோல வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் இடஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறோம்.தேமுதிகவை பொருத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவும் தயாராக உள்ளது.
மாமியார், மருமகளை கட்டிப் போட்டுவிட்டு 135 சவரன் நகை கொள்ளை... மதுரையில் துணிகர சம்பவம்!
பொதுமக்களின் மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் அவர்கள் ஐந்து முறை ஆட்சி செய்தபோது என்ன செய்தனர்?
யார் வேண்டுமானாலும் வாக்குறுதிகளை அளிக்கலாம்; அதை நிறைவேற்றுவது யார்? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வியெழப்பினார்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் சம்பந்தமான செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சசிகலா விடுதலை ஆகிறார்; அவர் பூரண குணமடைந்து வரவேண்டும். ஒரு பெண்மணியாக அவருக்கு என்னுடைய ஆதரவு உண்டு.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல; அதிமுகவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வெளியிட்ட அறிக்கையை பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்துகின்றனர். அதேபோல் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் நல்ல பல திட்டங்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வைத்துள்ளார். அவற்றை அவர் விரைவில் அறிவிப்பார்.
தேசியக்கொடி ஏற்றிய தூய்மைப் பணியாளர்... ஊராட்சித் தலைவருக்கு பாராட்டு
நடிகர் கமல்ஹாசன் சொன்னதுபோலவே கட்சி ஆரம்பித்து தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு மக்களின் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளதென்பது இந்த தேர்தலின் முடிவில் தெரியவரும்.
நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் செயல்பட்டு வருகிறோம். எனவே கூட்டணி குறித்து காலதாமதம் செய்யாமல் விரைவில் அறிவிக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டது.
அதேபோல வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் இடஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறோம்.தேமுதிகவை பொருத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவும் தயாராக உள்ளது.
மாமியார், மருமகளை கட்டிப் போட்டுவிட்டு 135 சவரன் நகை கொள்ளை... மதுரையில் துணிகர சம்பவம்!
பொதுமக்களின் மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் அவர்கள் ஐந்து முறை ஆட்சி செய்தபோது என்ன செய்தனர்?
யார் வேண்டுமானாலும் வாக்குறுதிகளை அளிக்கலாம்; அதை நிறைவேற்றுவது யார்? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வியெழப்பினார்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் சம்பந்தமான செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.