Sources Said That People From Arunthathiyar Community Being Locked Up For Votes By Dmk In Erode East
பவர் கட்.. குடிநீர் கட்.. ஈரோடு கிழக்கில் எளிய மக்கள் அடைத்து வைப்பு..?
ஈரோடு கிழக்கில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகளை திமுகவினர் அடைத்து வைத்து மிரட்டல் விடுப்பதாக புகார் வந்துள்ளது.
Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil17 Feb 2023, 5:07 pm
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்க திமுக களத்தில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை குறித்து அதிமுக ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில், கடந்த 6 நாட்களில் மட்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சார்பில் 36 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. சேர், செட், தினமும் மூன்று வேலை உணவு, அசைவ பிரியாணி, தினமும் ஒரு ஓட்டுக்கு தலா 1000 என கோடி கணக்கில் செலவழிக்கப்பட்டு வருவதாக அதிமுக குற்றம் சாட்டுகிறது.
Samayam Tamil
மேலும், அதிமுக பிரச்சார கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் தடுப்பதாகவும், கொட்டகை அமைத்து மக்களை அடைத்து வைத்து கண்காணிப்பதாகவும் திமுக மீது அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாய்ச்சலில் உள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்குக்கு உட்பட்ட நாராயண வலசுவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இதில், அருந்ததியர் மக்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் பாரம்பரியமாக அதிமுக-வுக்கு வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து இங்குள்ள தினக்கூலிகள் யாரும் எந்த வேலைக்கும் செல்ல விடாமல் தி.மு.க.வினர் கொட்டகைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் தலா 500 ரூபாய் கொடுத்து இந்த ஏழைகள் அனைவரையும் ரகசிய கேமரா மூலம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்று பார்க்கலாம் என்று திமுகவினர் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால், அவர்கள் அடையாளம் காணப்பட்டு குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என லோக்கல் நிர்வாகிகள் பகிரங்கமாக தெரிவிக்கப்பதாகவும் அந்த தகவலில் தெரிய வந்துள்ளது. வந்தேறி ஓட்டு எதுக்கு? சீமான் பேச்சால் நாம் தமிழர் வேட்பாளருக்கு எதிர்ப்பு..திரும்பி போன சோகம்..!
தினமும் காலை கொட்டகைக்கு வரவழைக்கப்படும் இந்த மக்கள் தி.மு.க.வைப் புகழ்ந்து முழக்கம் எழுப்பி காங்கிரசுக்கு ஓட்டு கேட்பதுதான் அன்றாட வேலை என்கின்றனர். ஒருவேளை, அ.தி.மு.க., வேட்பாளரோ அல்லது தலைவர்களோ பிரசாரத்திற்கு வரும்போது இவர்களின் யாரேனும் அங்கு இருந்தால், அவர்களின் தினசரி பேட்டா நிறுத்தப்படும் என்பது விதியாம்.
மேலும், அந்த குடியிருப்பு வாசிகள் யாரும் கொட்டகையை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் திமுகவின் ஒரு அலுவலக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்தே நடப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.