கற்பழிக்கும் போது தன்னை காப்பாற்றுமாறு பாதிக்கப்பட்ட பெண் கத்தவில்லை என கூறி குற்றம்சாட்டப்பட்ட நபரை இத்தாலி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உயர் அதிகாரி தன்னை கற்பழித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் தன்னை அடிக்கடி பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும், உடலுறவுக்கு மறுக்கும் போதெல்லாம் பணிவாய்ப்பு அளிக்காமல் புறக்கணித்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை மறுத்துள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர், இருவரும் மனமொத்து உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ”அந்த நபர் கற்பழிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண் ஏன் தன்னை காப்பாற்றுமாறு கத்தவில்லை? ” என அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அந்த பெண்,” ஒருவர் உடலுறவுக்கு அழைக்கும் போது முடியாது என கூறும் வார்த்தையே போதுமானதாகும். மேலும் என்னை கற்பழித்தவர், என்னை விட பலசாலி என்பதால் அவரை என்னால் தடுக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத அந்த நீதிபதி, கற்பழிக்க வரும் ஒரு நபரிடம் வேண்டாம் என கூறுவது போதுமான ஆதாரமாக இல்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரை விடுவித்துள்ளார். இந்த தீர்ப்பு இத்தாலி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Italian court says no rape happened as woman didn’t scream, minister takes stock
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உயர் அதிகாரி தன்னை கற்பழித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் தன்னை அடிக்கடி பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும், உடலுறவுக்கு மறுக்கும் போதெல்லாம் பணிவாய்ப்பு அளிக்காமல் புறக்கணித்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை மறுத்துள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர், இருவரும் மனமொத்து உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ”அந்த நபர் கற்பழிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண் ஏன் தன்னை காப்பாற்றுமாறு கத்தவில்லை? ” என அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அந்த பெண்,” ஒருவர் உடலுறவுக்கு அழைக்கும் போது முடியாது என கூறும் வார்த்தையே போதுமானதாகும். மேலும் என்னை கற்பழித்தவர், என்னை விட பலசாலி என்பதால் அவரை என்னால் தடுக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத அந்த நீதிபதி, கற்பழிக்க வரும் ஒரு நபரிடம் வேண்டாம் என கூறுவது போதுமான ஆதாரமாக இல்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரை விடுவித்துள்ளார். இந்த தீர்ப்பு இத்தாலி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Italian court says no rape happened as woman didn’t scream, minister takes stock