இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இதனால், கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கபில் தேவ் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
கபில் தேவ் உடல்நிலை குறித்து நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் “கபில் தேவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார். தற்போது வரை அவர் ஐசியுவில் தான் உள்ளார். சில தினங்களில் வீடு திரும்புவார்” எனத் தெரிவித்திருந்தது.
கபில் தேவ் நலம் பெறவேண்டி இறைவனைப் பிராத்திப்பதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்கள் ட்வீட் வெளியிட்டனர்.
கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு: வெளியானது மருத்துவமனை அறிக்கை!
சச்சின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கபில் தேவ், உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். விரைந்து குணமடைய பிராத்திக்கிறேன்” எனப் பதிவிட்டார். அதேபோல் விராட் கோலி, “கபில்தேவ் சார், நீங்கள் விரைந்து குணமடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” என ட்வீட் வெளியிட்டார்.
ரவிச்சந்திரன் அஸ்வின், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், அஜிங்கிய ரஹானே, அனில் கும்ளே, பிரெட் லீ, மயங்க் அகர்வால் போன்றவர்களும் கபில் தேவ் விரைந்து குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என கபில்தேவ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
CSK vs MI: படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
1983ஆம் ஆண்டில் இந்திய அணி முதல் முறை உலகக் கோப்பை வென்றபோது, கபில் தேவ் அணியின் கேப்டனாக இருந்தவர். மொத்தம் 131 டெஸ்ட், 225 ஒருநாள் போட்டிகள் விளையாடி, 16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் உலகில் பயணித்தவர். கிபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்து ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில், கபில் தேவ் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
கபில் தேவ் உடல்நிலை குறித்து நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் “கபில் தேவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார். தற்போது வரை அவர் ஐசியுவில் தான் உள்ளார். சில தினங்களில் வீடு திரும்புவார்” எனத் தெரிவித்திருந்தது.
கபில் தேவ் நலம் பெறவேண்டி இறைவனைப் பிராத்திப்பதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்கள் ட்வீட் வெளியிட்டனர்.
கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு: வெளியானது மருத்துவமனை அறிக்கை!
சச்சின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கபில் தேவ், உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். விரைந்து குணமடைய பிராத்திக்கிறேன்” எனப் பதிவிட்டார். அதேபோல் விராட் கோலி, “கபில்தேவ் சார், நீங்கள் விரைந்து குணமடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” என ட்வீட் வெளியிட்டார்.
ரவிச்சந்திரன் அஸ்வின், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், அஜிங்கிய ரஹானே, அனில் கும்ளே, பிரெட் லீ, மயங்க் அகர்வால் போன்றவர்களும் கபில் தேவ் விரைந்து குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என கபில்தேவ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
CSK vs MI: படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
1983ஆம் ஆண்டில் இந்திய அணி முதல் முறை உலகக் கோப்பை வென்றபோது, கபில் தேவ் அணியின் கேப்டனாக இருந்தவர். மொத்தம் 131 டெஸ்ட், 225 ஒருநாள் போட்டிகள் விளையாடி, 16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் உலகில் பயணித்தவர். கிபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்து ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில், கபில் தேவ் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.