இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜூக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் வீட்டுமனை பரிசாக அளிக்கப்படும் என்று தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. நூலிழையில் கோப்பையை தவறிவிட்டபோதும் வீராங்கனைகள் அனைவரும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் சென்ற கேப்டன் மிதாலி ராஜூக்கும் பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தெலுங்கானா மாநில அரசு சார்பில் மிதாலிக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் வீட்டுமனை பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மிதாலியை வெள்ளிக்கிழமையன்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த பின்பு, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. நூலிழையில் கோப்பையை தவறிவிட்டபோதும் வீராங்கனைகள் அனைவரும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் சென்ற கேப்டன் மிதாலி ராஜூக்கும் பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தெலுங்கானா மாநில அரசு சார்பில் மிதாலிக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் வீட்டுமனை பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மிதாலியை வெள்ளிக்கிழமையன்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த பின்பு, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.