லண்டன்: பயிற்சியாளர் கும்ளே விலகவில்லை என்றால், கேப்டன் பதவியில் இருந்து நான் விலகுவேன் என கோலி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தொடருக்கு முன்னதாக, இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் கும்ளே இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவியது. ஒருவழியாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை தாக்குபிடித்த கும்ளே, தற்போது தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆனால் அதன்பின் தான் விலகியதற்கு கோலியின் பிடிவாதமே காரணம் என்றும் நேரடியாக தெரிவித்தார். இந்நிலையில், கும்ளே பதிவி விலகவில்லை என்றால், தான் பதவிவிலகுவேன் என கோலி தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில்,’ கும்ளே கிளம்ப வேண்டும் என்ற விஷயத்தில் கோலி மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தார். இதற்கு கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களான சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவர் செல்லவில்லை என்றால் நான் சென்றுவிடுவேன் என்றும் கோலி கூறியுள்ளார்.’ என தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தொடருக்கு முன்னதாக, இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் கும்ளே இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவியது. ஒருவழியாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை தாக்குபிடித்த கும்ளே, தற்போது தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆனால் அதன்பின் தான் விலகியதற்கு கோலியின் பிடிவாதமே காரணம் என்றும் நேரடியாக தெரிவித்தார். இந்நிலையில், கும்ளே பதிவி விலகவில்லை என்றால், தான் பதவிவிலகுவேன் என கோலி தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில்,’ கும்ளே கிளம்ப வேண்டும் என்ற விஷயத்தில் கோலி மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தார். இதற்கு கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களான சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவர் செல்லவில்லை என்றால் நான் சென்றுவிடுவேன் என்றும் கோலி கூறியுள்ளார்.’ என தெரிவித்துள்ளார்.