மீனாவின் கணவர்
நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் கடந்த செவ்வாய்க் கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர், மாற்று நுரையீரல் கிடைக்க தாமதமானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Nayanthara:படப்பிடிப்புக்கு சென்ற நயன்தாரா... எல்லை மீறிய பவுன்ஸர்ஸ்.. வைரலாகும் வீடியோ!
48 வயதில்
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சுயநினைவின்றி எக்மோ சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், நினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார். 48 வயதே ஆன வித்யாசாகரின் மரணம் தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாராவோட இந்த க்ளிக்ஸ்லாம் பாத்திருக்கிங்களா... அசத்தல் போட்டோஸ்!
சுத்தம் செய்யும் பெண்
இந்நிலையில் நடிகை மீனாவின் வீட்டில் சுத்தம் செய்யும் வேலை செய்து வரும் அம்பிகா வித்யாசாகர் குறித்து பேசி கண்கள் கலங்கியுள்ளார். மாதம்தோறும் வீட்டை சுத்தம் செய்ய எங்கள் நிறுவனத்தைதான் நடிகை மீனா தொடர்பு கொள்வார் என்று கூறிய அம்பிக அப்படி சுத்தம் செய்ய வரும்போதுதான் வித்யாசாகர் சாரை தனக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Meena: மீனா கேட்ட 'அந்த' வார்த்தை... நொறுங்கி போயிட்டேன்... கண்கலங்கும் பிரபலம்!
ஆதரவாக பேசினார்
ஒருமுறை தான் தனி ஆளாக லேடரை தூக்கிக் கொண்டு வந்தபோது, அவர்கள் வீட்டு காவலாளியுடன் தனக்கு பிரச்சனை ஏற்பட்டதாகவும் அப்போது வித்யா சாகர் சார்தான் தனக்கு ஆதரவாக பேசினார் என்றும் கூறியுள்ளார் வீட்டில் வேலை செய்கிறவர், செய்யாதவர் என்ற பாகுபாடில்லாமல் நடந்துகொள்வார் வித்யாசாகர் என்றும் கூறியுள்ளார்.
Meena: எந்திரிங்க அப்பா... வித்யாசாகரின் உடலை கட்டிப்பிடித்து கதறிய நைனிகா!
எப்போது பார்ப்போம்
சாரை பார்த்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்ற அவர் தான் அப்பா இல்லாமல் வளர்ந்த பெண் என்றும் அவரது குழந்தையை நினைத்தால் மனதிற்கு ரொம்பவும் வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார் அம்பிகா. மீனாவுக்கு நெருங்கியவர்களும் வித்யாசாகர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், இனி எப்போது அந்த முகத்தை பார்க்க போகிறோம் என கூறி கலங்கி வருகின்றனர்.