வெங்கடேஷ் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான தம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பெங்களூரை சேர்ந்த ரக்ஷிதா. அதன் பிறகு அவர் விஜய்க்கு ஜோடியாக மதுர படத்தில் நடித்தார். அவர் விஜய்யுடன் சேர்ந்து இலந்த பழம் இலந்த பழம் உனக்குத் தான் என்று பாடி ஆடியதை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த படத்திற்கு பிறகு ரக்ஷிதா தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். இந்நிலையில் அவர் பிரபல கன்னட இயக்குநர் பிரேமை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வரும் ரக்ஷிதா தற்போது கன்னட படங்களில் மட்டுமே நடிக்கிறார். படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். பிரேம் இயக்கி வரும் ஏக் லவ் யா கன்னட படத்தை ரக்ஷிதா தன்னுடைய ரக்ஷிதா ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்து வருகிறார். அந்த படத்தில் ரக்ஷிதாவின் தம்பி ராணா தான் ஹீரோ.
படத்தில் ரக்ஷிதாவும் இருக்கிறார். கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமானதால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சந்தோஷத்தில் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ரக்ஷிதா.
பல ஆண்டுகளாக அவரை பார்க்காத தமிழ் ரசிகர்கள் கண்ணில் அந்த புகைப்படம் படவே பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மதுர படம் ஹீரோயினா இவங்க, ஆள் அடையாளமே தெரியவில்லையே என்கிறார்கள்.
ஏன் மேடம் தமிழ் படங்களில் நடிப்பது இல்லை என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். இந்நிலையில் அவர் பிரபல கன்னட இயக்குநர் பிரேமை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வரும் ரக்ஷிதா தற்போது கன்னட படங்களில் மட்டுமே நடிக்கிறார். படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். பிரேம் இயக்கி வரும் ஏக் லவ் யா கன்னட படத்தை ரக்ஷிதா தன்னுடைய ரக்ஷிதா ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்து வருகிறார். அந்த படத்தில் ரக்ஷிதாவின் தம்பி ராணா தான் ஹீரோ.
படத்தில் ரக்ஷிதாவும் இருக்கிறார். கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமானதால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சந்தோஷத்தில் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ரக்ஷிதா.
ஏன் மேடம் தமிழ் படங்களில் நடிப்பது இல்லை என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.