ஜி.எஸ்.டி. வரி சம்பந்தமாக இன்று திரையரங்க உரிமையாளர்கள் அவசர ஆலோசனையை நடத்தியுள்ளனர்.
திரையரங்க டிக்கெட் விற்பனையில் ஜிஎஸ்டி வரி குறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை, செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் இன்று நடக்கிறது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த திரையரங்க உரிமை யாளர்கள் சிலர் கூறியதாவது: மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் திரையரங்க டிக்கெட் விற்பனையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து தமிழக அரசின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இதுதொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். டிக்கெட் விற்பனை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசும் 30 சதவீத நகராட்சி வரி விதித்தால் கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம்.
ரூ.100 டிக்கெட் விற்பனையில் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.58 வரி செலுத்திவிட்டு, எஞ்சியுள்ள ரூ.42-ஐ திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் எப்படி பிரித்துக் கொள்ள முடியும்? இப்படி பிரித்துக்கொண்டால், தமிழ்த் திரையுலகில் எந்த படத்துக்கும் லாபமே வராது. இதனால், ஜூலை 1-ம் தேதி டிக்கெட் முன்பதிவையும் தொடங்காமல் இருக்கிறோம் என்றுஅவர்கள் கூறினர்.
திரையரங்க டிக்கெட் விற்பனையில் ஜிஎஸ்டி வரி குறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை, செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் இன்று நடக்கிறது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த திரையரங்க உரிமை யாளர்கள் சிலர் கூறியதாவது: மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் திரையரங்க டிக்கெட் விற்பனையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து தமிழக அரசின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இதுதொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். டிக்கெட் விற்பனை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசும் 30 சதவீத நகராட்சி வரி விதித்தால் கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம்.
ரூ.100 டிக்கெட் விற்பனையில் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.58 வரி செலுத்திவிட்டு, எஞ்சியுள்ள ரூ.42-ஐ திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் எப்படி பிரித்துக் கொள்ள முடியும்? இப்படி பிரித்துக்கொண்டால், தமிழ்த் திரையுலகில் எந்த படத்துக்கும் லாபமே வராது. இதனால், ஜூலை 1-ம் தேதி டிக்கெட் முன்பதிவையும் தொடங்காமல் இருக்கிறோம் என்றுஅவர்கள் கூறினர்.