தமிழக தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் சீசன் 3 தற்போது ஆரவாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் கடந்த 7ம் தேதி ஊடகவியலாளரும், நடிகையுமான ஃபாத்திமா பாபு வெளியேறினார். அதை தொடர்ந்து, கடந்த வாரம் முழுக்க விறுவிறுப்பான டாஸ்குகள் மற்றும் கலகலப்பான அம்சங்களுடன் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது. எனினும், எப்போதுமே பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்னை செய்து வரும் நடிகை வனிதா மீண்டும் போட்டியாளர்களுடன் சச்சரவில் ஈடுபட்டு வந்தார்.
அவரால் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் அதிகரித்தாலும், அவரது நடவடிக்கைகளுக்கு சர்ச்சைகள் தொடர்ந்து வந்தன. மேலும், இந்த வாரம் எலிமமேஷனுக்கு மோகன் வைத்தியா, மீரா மிதூன், மதுமிதா ஆகியோருடன் சேர்ந்து வனிதா விஜயகுமார் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.
நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன், மோகன் வைத்தியாவை ‘சேவ்’(காப்பாற்றுதல்) செய்தார். தவிர, இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியானதில் மீண்டும் மதுமிதா சேவ் செய்யப்பட்டதாக தெரிகிறது. அதற்கு ஏற்றவாறு பிக்பாஸ் வீட்டில் ஆரவாரம் எழுகிறது.
இந்நிலையில், மீரா மிதூன், சரவணன் நீங்கலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா விஜயகுமார் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. ‘கொடூரக் கொலையாளி’ டாஸ்கை சிறப்பாக செய்ததற்காக அவர் சேவ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விதிகளை மாற்றாது, அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது சேரன், லோஸ்லியா, மதுமிதா போன்ற போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஷெரீனுக்கும் மட்டும் அவருடைய வெளியேற்றம் கவலை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் வனிதா மற்றும் மதுமிதாவின் நடவடிக்கைகளுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார். ஆயினும், அதற்கு மறுபடி அளித்த வனிதா தன்னுடைய குணநலன் இதுதான் என்றும், பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றவர்களை போட்டுக்கொடுக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும் என எவ்வித தயக்கமுமின்றி அவர் தெரிவித்தார்.
கமல்ஹாசன் விமர்சனத்திற்கு பதில் அளிக்காமல், தான் செய்ததும் சொன்னதும் சரியென்று வனிதா பேசியது பிக்பாஸ் பார்வையாளர்கள் மற்றும் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து வனிதா விஜயகுமார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
அவரால் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் அதிகரித்தாலும், அவரது நடவடிக்கைகளுக்கு சர்ச்சைகள் தொடர்ந்து வந்தன. மேலும், இந்த வாரம் எலிமமேஷனுக்கு மோகன் வைத்தியா, மீரா மிதூன், மதுமிதா ஆகியோருடன் சேர்ந்து வனிதா விஜயகுமார் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.
நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன், மோகன் வைத்தியாவை ‘சேவ்’(காப்பாற்றுதல்) செய்தார். தவிர, இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியானதில் மீண்டும் மதுமிதா சேவ் செய்யப்பட்டதாக தெரிகிறது. அதற்கு ஏற்றவாறு பிக்பாஸ் வீட்டில் ஆரவாரம் எழுகிறது.
இந்நிலையில், மீரா மிதூன், சரவணன் நீங்கலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா விஜயகுமார் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. ‘கொடூரக் கொலையாளி’ டாஸ்கை சிறப்பாக செய்ததற்காக அவர் சேவ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விதிகளை மாற்றாது, அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது சேரன், லோஸ்லியா, மதுமிதா போன்ற போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஷெரீனுக்கும் மட்டும் அவருடைய வெளியேற்றம் கவலை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் வனிதா மற்றும் மதுமிதாவின் நடவடிக்கைகளுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார். ஆயினும், அதற்கு மறுபடி அளித்த வனிதா தன்னுடைய குணநலன் இதுதான் என்றும், பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றவர்களை போட்டுக்கொடுக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும் என எவ்வித தயக்கமுமின்றி அவர் தெரிவித்தார்.
கமல்ஹாசன் விமர்சனத்திற்கு பதில் அளிக்காமல், தான் செய்ததும் சொன்னதும் சரியென்று வனிதா பேசியது பிக்பாஸ் பார்வையாளர்கள் மற்றும் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து வனிதா விஜயகுமார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.