ஆப்நகரம்

வயசுக்கு வந்த மகளுடன் இப்படியா போட்டோ எடுப்பது?: சேரனை விளாசிய நெட்டிசன்ஸ்

சேரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பாராட்டியும் உள்ளனர், விமர்சனமும் செய்துள்ளனர்.

Samayam Tamil 27 Sep 2019, 1:58 pm
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேறிய சேரனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சிக்காக தன் கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் நீங்கள், நீங்களாகவே இருந்தீர்கள். அநியாத்திற்கு நல்லவராக இருந்த காரணத்தால் தான் உங்களை வெளியேற்றிவிட்டார்கள் என்று சேரனின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil netizens appreciate and criticise cheran
வயசுக்கு வந்த மகளுடன் இப்படியா போட்டோ எடுப்பது?: சேரனை விளாசிய நெட்டிசன்ஸ்


சேரன் தனது மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார். அதை பார்த்த சேரனின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

உங்களை அப்பாவாக பெற தாமினி பாப்பா கொடுத்து வைத்தவர். இந்த புகைப்படத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ஆயிரம் தான் இருந்தாலும் சொந்த மகள் போன்று வருமா. இதை விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டில் போயும், போயும் அந்த லோஸ்லியா மீது பாசம் வைத்தீர்களே.



எப்பொழுது புதுப்பட வேலைகளை துவங்கப் போகிறீர்கள் என்று தெரிவித்துள்ளனர். சேரனை பலர் பாராட்டியிருந்தாலும், சிலர் விமர்சித்துள்ளனர்.

அதாவது, என்ன தான் மகளாக இருந்தாலும் வயதுக்கு வந்த பெண்ணுடன் இப்படியா புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவது. மற்றவர்கள் வெளியிட்டால் பரவாயில்லை, குடும்பப் பாங்கான படங்களை எடுக்கும் நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

டி.ஆர்.பி.க்காக பிக் பாஸ் செய்த காரியத்தை 'எக்ஸ்போஸ்' செய்த சேரன்

பிரபலங்கள் தங்கள் மகளுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டால் விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமாகிவிட்டது. முன்னதாக பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பலரிடம் திட்டு வாங்கினார். வயது வந்த மகளை இப்படியா மேலே அமர வைப்பது என்று நெட்டிசன்கள் விளாசினார்கள்.

கவின் எங்கும் போகவில்லை, பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கிறாராம்: எப்படி தெரியுமா?

இந்நிலையில் சேரனுக்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. முன்னதாக கமல் ஹாஸனை கூட தனது மகள் ஸ்ருதியுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்ததற்காக நெட்டிசன்கள் விளாசினார்கள். பெண் பிள்ளை வளர்ந்து திருமணமாகி குழந்தைக்கு தாயானாலும் பெற்ற தந்தைக்கு அவள் குழந்தை தான். அதனால் தான் மகளுடன் நெருக்கமாக நின்றால் தந்தைகளுக்கு அது வித்தியாசமாக தெரிவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி