ஆப்நகரம்

ரூ.570 கோடி கோவை சென்றடைந்தது

திருப்பூர் அருகே கடந்த மே 14ஆம் தேதி ரூ.570 கோடி பணத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட 3 கண்டெய்னர் லாரிகள் கோவை சென்றடைந்தன.

TNN 17 May 2016, 9:06 am
கோயம்புத்தூர்: திருப்பூர் அருகே கடந்த மே 14ஆம் தேதி ரூ.570 கோடி பணத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட 3 கண்டெய்னர் லாரிகள் கோவை சென்றடைந்தன.
Samayam Tamil 3 container lorry carries rs 570 crore reaches coimbatore
ரூ.570 கோடி கோவை சென்றடைந்தது


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகலத்தில் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டிருந்த 3 கண்டெய்னர் லாரிகளும் தற்போது ​ராணுவம் மற்றும் போலீஸ் என பலத்த பாதுகாப்புடன் கோவை எஸ்.பி.ஐ வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த இந்த பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு பின் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, பணத்துடன் லாரிகள் கோவை கொண்டு செல்லப்பட்டன. மேலும், ரூ.570 கோடியை எஸ்.பி.ஐ வங்கியிடம் ஒப்படைப்பது குறித்து வருமானவரித்துறை இறுதி முடிவு செய்யும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி