ஆப்நகரம்

உத்தரப்பிரதேச தேர்தல் தோல்வியை ஏற்கிறோம்: அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

TNN 11 Mar 2017, 7:04 pm
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil accept up result hope the next govt will do it best akhilesh
உத்தரப்பிரதேச தேர்தல் தோல்வியை ஏற்கிறோம்: அகிலேஷ் யாதவ்


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், ஆளுங்கட்சியான சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிக் கூட்டணி, 54 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

அதேசமயம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாஜக 325 இடங்களில் முன்னிலை வகிப்பதாக, அறிவிக்கப்பட்டது. இதன்மூலமாக, அசுர பலத்துடன் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சி, 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளால், சமாஜ்வாடி கட்சி பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

அத்துடன், ‘’மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். இதுபற்றி ஒவ்வொரு தொகுதி வாரியாகவும் பதிவான வாக்குகள், மற்றும் மக்களின் கருத்துகளை பற்றியும் பரிசீலிப்போம். புதியதாக ஆட்சியமைக்க உள்ள பாஜக.,வினர் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்,’’ என்றும் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

“I hope the next government will work better than the Samajwadi Party’s in Uttar Pradesh,” outgoing Uttar Pradesh CM Akhilesh Yadav said Saturday, after his party was routed in the state elections results.

அடுத்த செய்தி