ஆப்நகரம்

மீண்டும் ஒரு கன்டெய்னர் ஆவடியில் நின்றதால் பரபரப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்த நிலையில், கடைசி நேரப் பணப்பட்டுவாடா தீவிரம் அடைந்துள்ளது.

TNN 15 May 2016, 1:15 pm
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்த நிலையில், கடைசி நேரப் பணப்பட்டுவாடா தீவிரம் அடைந்துள்ளது.
Samayam Tamil again a suspicious container lorry stands near aavadi
மீண்டும் ஒரு கன்டெய்னர் ஆவடியில் நின்றதால் பரபரப்பு


வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் அப்டையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஆவடி அருகே சந்தேகத்திற்கு இடமான விதத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கன்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த லாரியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதேபோன்று திருப்பூர் அருகே நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.570 கோடியை ஏற்றிச் சென்ற 3 கன்டெய்னர் லாரிகள் பறிமுத செய்யப்பட்டன. இந்தப் பணம் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என கூறப்பட்ட நிலையில், இது தொடர்பான ஆவணங்களை உயர்மட்டக் குழு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி