ஆப்நகரம்

ஆப்பிள் அடுத்த இலக்கு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்!

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐபோன்களின் விற்பனையை இந்த மாத இறுதியில் தொடங்கப்போவதாகக் கூறியுள்ளது.

TNN 18 May 2017, 5:53 pm
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐபோன்களின் விற்பனையை இந்த மாத இறுதியில் தொடங்கப்போவதாகக் கூறியுள்ளது.
Samayam Tamil apples made in india iphones to hit stores this month
ஆப்பிள் அடுத்த இலக்கு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்!


ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் விற்பனையை அதிகரிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் முக்கிய அம்சமாக, இந்தியாவில் விற்கும் ஐபோன்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு முடிவு செய்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இதற்கான வேலைலகளைத் மேற்கொண்டுள்ள ஆப்பள் நிறுவனம் அம்மாநில அரசின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. ஏற்கெனவே, ஐபோன்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.

மே மாத இறுதியில் உள்ளூரில் ஆர்டர் செய்யப்படும் ஐபோன்கள் மட்டும் பெங்களூரிலிருந்து அனுப்பிவைக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டின் இறுதியில் நாடு முழுவதும் பெங்களூரில் தயாராகும் ஐபோன்களே விற்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதற்கட்டமாக, ஐபோனின் புகழ்பெற்ற 4 இன்ச் மாடலான ஐபோன் எஸ்.ஈ. பெங்களூரில் தயாரிக்கப்படுகிறது. கைக்கு அடக்கமான இந்த மொபைல் அறிமுகமானது முதல் பெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி