ஆப்நகரம்

இந்திய ஜிடிபிக்கு ரூ. 1.4 லட்சம் கோடி மூலம் வலு சேர்த்த ஆப்புகள்!!

இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) இணையதள ஆப் மூலம் ரூ. 1.4 லட்சம் கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது வரும் 2020ஆம் ஆண்டில் ரூ.18 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TOI Contributor 15 Jul 2017, 5:42 pm
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) இணையதள ஆப் மூலம் ரூ. 1.4 லட்சம் கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது வரும் 2020ஆம் ஆண்டில் ரூ. 18 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil apps added rs 1 4 lakh crore to indias gdp in 2015 16 study
இந்திய ஜிடிபிக்கு ரூ. 1.4 லட்சம் கோடி மூலம் வலு சேர்த்த ஆப்புகள்!!


மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வை சர்வதேச பொருளாதார தொடர்புக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய பிராட்பேண்ட் அமைப்பு மேற்கொண்டன. இணையதளம் வழியாக பயன்படுத்தப்படும் ஆப்பினால்தான் பொருளாதாரத்திற்கு இந்த அளவிற்கு வருமானம் கிடைத்துள்ளது.

வரும் 2020ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்திற்கு இணையதள பொருளாதாரத்தின் மூலம் 537.4 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும். இதில் 270.9 டாலர் வருமானம் ஆப் மூலம் கிடக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல்வேறு ஆய்வுகள், இதுவரையிலான ஆப் பயன்பாடு வைத்து பார்க்கும்போது இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஆப்பின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு நாட்டில் உள்ள 19 தொலைபேசி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து இணையதள பயன்பாடுகளும் ஆப் வழியாக இல்லை என்றாலும், ஆப் பயன்பாடுகளின் ஊகங்கள் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஆப் உதவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இணையத்தால் பொருளாதாரமும் இந்தியாவில் வரும் 2020ஆம் ஆண்டில் 15 சதவீத வளர்ச்சியைப் பெறும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Internet apps added Rs 1.4 lakh crore to India's GDP in 2015-16, says a study released on Friday . It expects the figure to grow to Rs 18 lakh crore by 2020.

அடுத்த செய்தி