ஆப்நகரம்

தொழில் முன்னேற்றம் பெற, அதில் சிறப்பான இடம் பெற சொல்ல வேண்டிய அற்புத மந்திரம்

தொழில் நஷ்டம் நீங்கி லாபம் பெற, மனகஷ்டங்கள் தீர உச்சரிக்க வேண்டிய அம்பிகை, விநாயகருக்கு உரிய மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 9 Sep 2020, 5:58 pm
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் தொழிலாளர்கள். அவர்கள் தொழில் செய்பவர்களாக அல்லது தொழிலில் பணியாளராக இருப்பது வழக்கம்.
Samayam Tamil Ambika Mantra
Ambika Mantra


அப்படி சொந்த தொழில் செய்பவர்கள் அல்லது சிலருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். தொழில் தொடங்குபவர்கள் உடனே அதில் முன்னேற்றம் அல்லது லாபம் எதிர்பார்ப்பது தவறு தான். ஆனால் நன்றாக சென்று கொண்டிருந்த தொழில் திடீரென சரிவது, லாபம் கிடைக்காமல் போகுதல் என்ற நிலை இருக்கும்.

இப்படிப்பட்ட நேரத்தில் லாபம் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை, போட்ட முதலுக்கே மோசம் போய்விடும் போல என மனதில் வலியுடன் இருப்பார்கள்.

இப்படி மனமுடைந்த தொழில் செய்பவர்கள் தங்களின் கஷ்டங்கள் தீர வினை தீர்க்கக் கூடிய விநாயகருக்குரிய மந்திரத்தையும், அம்பிகைக்குரிய ஸ்லோகத்தை உச்சரித்து, பல காலமாக செய்து கொண்டிருந்த கை விடப்படும் நிலையில் இருக்கும் தொழில் கூட முன்னேற்றமும், நம்பிக்கையும் ஏற்படும்.

ஸ்ரீ கணபதி ஸஹஸ்ரநாம
லஷோ லக்ஷ ப்ரதோ லக்ஷ்யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய:
ஸாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாபக்ருல் லோக விஸ்ருத

இந்த கணபதிக்குரிய ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை தினமும் 108 முறை 45 நாட்கள் உச்சரித்து வந்தால், சரிவில் இருந்த தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும்.

அம்பிகை ஸ்லோகம்
அம்பிகைக்குரிய கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்வதன் மூலம், தொழிலில் மேல் நிலையை அடையலாம்.

சிவ சக்தி காம க்ஷிதி -ரத ரவி ஸீத கிரண
ஸ்மரோ ஹம்ஸ ஸக்ரஸ்-ததநுச பரா-மார-ஹரய:
அமீ ஹ்ருல்லே காபிஸ் – திஸ்ருபி-ரவஸாநேஷு கடிதா
பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜநநி நாமாவய வதாம்

இந்த ஸ்லோகம் உச்சரித்து வர கடினமான சூழல் நீங்கும். தொடர்ந்து 45 நாட்கள் இதனை மனதார சொல்லி வர தொழில் முன்னேற்றம் அடையும், வியாபாரம் விருத்தி அடையும். லாபம் மன நிறைவைத் தரும்.
இந்த ஸ்லோகத்தை உச்சரிப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், தொடந்து நாற்பத்தைந்து நாட்கள் சொல்லி வர வியாபாரம் சிறந்து விளங்குவதோடு, நல்ல லாபம் ஈட்டலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்