நீதி அரசன் சனி பகவான்
நேர்மையானவர்களைக் கண்டால் தவறு செய்யக்கூடிய எப்பேர்ப்பட்ட உயர் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு ஒருவித கலக்கமும், மதிப்பு, மரியாதை ஏற்படும். அப்படி தன் பெயரைக் கேட்டதும் ஒருவித பயம் கலந்த மரியாதையை தன் மனதில் கொண்டு வரக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் ஒரு நீதி அரசராக செயல்படுபவர். ஒருவர் செய்யக்கூடிய நன்மை, தீமைகளைக் கணக்கிட்டு அதற்கேற்றார் போல அந்த பிறவியிலேயோ அல்லது அடுத்த பிறவியிலேயோ கண்டிப்பாக அதற்கேற்ற படிப்பினையைக் கொடுக்கக்கூடியவர்.
அதன் காரணமாக தான் தினமும் நவகிரகங்களில் சில கிரகங்களின் பெயர்ச்சி நடந்து கொண்டிருந்தாலும், இன்றும் சனிப் பெயர்ச்சி என்றால் நம்மால் அதிகம் கவனிக்கப்படக்கூடியவராக உள்ளார்.
சனியின் கோர பார்வை
சனியின் பார்வையின் காரணமாக ராஜா போல அனைத்து வசதிகளுடன் வாழ்பவர்கள் பிச்சைக்காரராக ஒன்றுமில்லாதவராகவும், பிச்சைக்காரர்கள், ராஜாவைப் போல உயர்த்தக்கூடிய சக்தி வாய்ந்தது.
அதன் கரணத்தால் தான் “சனி பகவானைப் போல கொடுப்பாரும் இல்லை. சனியைப் போல கெடுப்பாரும் இல்லை” என்பார்கள். அதாவது சனி பகவான் தான் விரும்பியவருக்கு ஏராளமான நற்பலன்களை வாரி வழங்கக்கூடியவர்.
கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்: வழிபடும் முறைகள்
ஒருவருக்கு சனியின் கொடிய பார்வை விழுந்துவிட்டால் அவருக்கு ஏழரை ஆண்டு காலம் சனி பிடித்து அவரின் குடும்பம், வேலை, தொழில், பிள்ளை செல்வம் என அனைத்து விதத்திலும் பல பிரச்சினைகளுக்குரியதாக்கி அவரின் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுவோமா என எண்ணக்கூடிய அளவிற்கு சிலருக்கு துன்பத்தை தரக்கூடியவர்.
இந்திரனை பிடித்த சனீஸ்வரன்
தேவர்களுக்கும், நவகிரகங்களுக்கும் தலைவனாக விளங்குபவர் இந்திரன். ஒரு முறை தேவேந்திரனை சனி பிடிக்கப்போவதாகக் கூறினார்.
தேவேந்திரனோ, “நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். உனக்கும் தான் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால் என்னை எப்படி நீ பிடிக்க முடியும்” என்றார்.
நான் அனைவருக்கும் சமமானவர். அதோடு தன் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றார் சனி பகவான்.
பூஜையின் போது மணி அடிப்பதில் இவ்வளவு அற்புதங்கள் இருக்கா... இதோ மணி குறித்த அரிதான தகவல்கள்
இதைக் கேட்ட இந்திரன், “சரி அப்படி என்றால் நீ என்னைப் பிடிப்பதாக இருந்தால், முன்னரே அந்த நேரத்தை கூறி விடு” என்றார்.
சனி தேவேந்திரனைப் பிடிக்கக்கூடிய நேரம் வந்தது. அது குறித்து இந்திரனிடம் கூறியதும் இந்திரன் ஒரு பெருச்சாளியின் உருவம் எடுத்து சாக்கடையில் ஒளிந்து கொண்டார்.
இந்திரனை தண்டித்த சனி
சனி பகவானால் தான் ஒளிந்து கொண்டிருக்கக் கூடிய இடத்தை கண்டறிய முடியாது. அதனால் அவரின் பார்வை என் மேல் விழாது என நம்பினான், மகிழ்ந்தான்.
சனி பகவானின் பார்வை படக்கூடிய காலம் முடிந்ததும், சாக்கடையிலிருந்து பெருச்சாளியிலிருந்து இந்திரனாக வெளி வந்தான்.
சனீஸ்வரனைக் கூப்பிட்டு, “பார்த்தாயா, உன்னுடைய பார்வையிலிருந்து நான் தப்பித்து விட்டேன் என பெருமை பேசினான்.”
சனியின் 3,7,10ஆம் பார்வைகளில் எதற்கு அதிகம் பலன்கள் இருக்கும்?
சனி கெடுபலனிலிருந்து தப்பிக்க
சனி பகவான் சிரித்துக் கொண்டே சொன்னார், “நீங்கள் தேவர்களுக்கெல்லாம் தலைவன். நவகிரகங்களுக்கும் கூட. தேவலோக சிம்மாசனத்தை விட்டு, சிஅல் காலம் அனைத்து கழிவுகளும் செல்லக்கூடிய சாக்கடையில் வசிக்க வைத்து விட்டேன் பார்த்தீர்களா?. இதற்கு காரணம் என் பார்வை பிடியினால் தான்” என்றார்.
சனிப்பெயர்ச்சியில் உச்சத்தைத் தொட உள்ள ராசிகள் - யாருக்கு பாதிப்பு?
தான் விரும்பினால் ஏழ்மை நிலையில் உள்ளவனை அரசனாக்க முடியும். அதே போ உன்னைப் போல விண்ணாலக்கூடியவனாக இருந்தாலும் கஷ்டத்தைக் கொடுக்க முடியும்.
என் பார்வை பிடியிலிருந்து தப்பிக்க, கெடுபலன் குறைய அகங்காரத்தை விடுத்து, நேர்மையாக, தங்களின் வேலையை சரியாக செய்து வந்தாலே போதுமானது என்றார்.