ஆப்நகரம்

சுக்கிர திசை நடப்பவர்கள் அதிர்ஷ்டத்தை அள்ள என்ன செய்யலாம்?

சுக்கிர தசை நடப்பவர்கள் கீழே சொன்ன எளிய விஷயங்களை பின்பற்றினால் சுக்கிரனின் அருளால் செல்வங்களையும், நல்லருளையும் பெற்றிடலாம்.

Samayam Tamil 21 Jan 2021, 1:11 pm
ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சியும், ஜாதக உள்ள கிரக நிலவரம் பொறுத்து நமக்கு பலன்கள் சொல்லப்படுகின்றன. ஒரு கிரக பெயர்ச்சியின் போது அந்த கிரகத்தால் ஒரு ராசிக்கு சிறப்பான பலன்கள் நடக்கும், சிலருக்கு சுமாரான பலன்கள் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி ஒரு மனிதனுக்கு நல்ல பலன்கள் பெறக்கூடிய ராசியாக அமைந்து அவர் மிக சிறப்பான பலன்களைப் பெற வேண்டுமென்றால் அவர்களின் ஜனன கால ஜாதகத்தில் தசா புத்திகள் சிறப்பாக அமைந்தால் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா நற்பலன்களும் அதிகமாக கிடைக்கும்.
Samayam Tamil Lord Sukran
Lord Sukran


திருமண பொருத்தம்: ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் - முழு பட்டியல்

சுக்கிர திசை நடந்தால் என்ன செய்ய வேண்டும்? :

தசைகளுக்கான காலம்:
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கிரகங்களின் தசா புத்திகள் நடக்கும். நவகிரகங்களின் தசை காலம்.

கேது 7 ஆண்டுகள்
சுக்கிரன் 20 ஆண்டுகள்

சூரியன் 6ஆண்டுகள்
சந்திரன் 10 ஆண்டுகள்

சுக்ர யோகம் மாளவியா யோகம் என்றால் என்ன, எப்படிப்பட்ட பலன் தரும்?

செவ்வாய் 7ஆண்டுகள்
ராகு 18ஆண்டுகள்

குரு 16ஆண்டுகள்
சனி 19ஆண்டுகள்
புதன் 17ஆண்டுகள்

இப்படி ஒருவருக்கு மிக நீண்ட காலம் நடக்கக்கூடிய சுக்கிர திசை நடக்கும் ஜாதகர் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களைத் தவறாமல் கடைப்பிடியுங்கள்.

சுக்கிர திசை நடப்பவர்கள், வெள்ளிக்கிழமைகளில் வெள்ளி டம்ளரில் பால் பாயசம் அருந்துவதால் உங்களின் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும்.

கழுத்தில் வெள்ளி சங்கிலி அல்லது கையில் வெள்ளி செயின் அணிந்து கொள்ளலாம்.

தசா புத்தி என்றால் என்ன? - சனி தசா நடந்தால் சனிப் பெயர்ச்சியின் போது அதிக பாதிப்பு ஏற்படுமா?

வாசனை திரவியங்களை பூசிக்கொள்ளலாம். எப்போதும் தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது.

சுக்கிரனின் அருளைப் பெற வெள்ளிக்கிழமையில் திருச்சி ஸ்ரீ ரங்கநாதனையும், தாயாரையும் வணங்குவதால் நற்பலன் பெறலாம்.

மகாலட்சுமியின் அவதாரமாக பெண்கள் பார்க்கப்படுகின்றனர். அதனால் பெண்களை மரியாதையாக நடத்துங்கள். உங்கள் துணைவியிடம் அன்பாகவும், அரவணைப்பாகவும் நடந்து கொள்ளுங்கள்.

மகாலட்சுமியின் அருள் பெற ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றும் போது, வீட்டு வாசலில் இரண்டு மண் விளக்குகள் வைத்து வழிபடவும்.
மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால் அனைத்தும் நிறைவேறும்.

தினமும் சுக்கிரன் காயத்திரி மந்திரத்தைத் துதித்து வாருங்கள்.

திருமணம் மற்றும் உடலுறவுமுறைகளை கிரகங்கள் எப்படி கட்டுப்படுத்துகிறது? - ஜோதிட அலசல்

சுக்ர காயத்ரி மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

சுக்கிரன் 6, 3, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் மற்றும் சுக்கிரன் நீசம் அஸ்த்தங்கம் ஆக இருப்பின் மேலே சொன்ன விஷயங்களை செய்யுங்கள்.

இதை செய்யும் போது முக்கியமாக அசைவ உணவுகளை கட்டாயம் வெள்ளிக்கிழமைகளில் சாப்பிடக்கூடாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்