ஆப்நகரம்

எவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு நிக்கலையா?-- அப்போ இதை செய்யுங்க!

Vastu Remedies for Saving Money: நாம் எவ்வளவு சம்பாதித்தாலும், மாத கடைசியில் கையில் பணம் இருப்பதில்லை. சிலர் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை சேமிக்க வேண்டும் என நினைத்தாலும் அது நடப்பதில்லை. இதற்கு நாம் செய்யும் சில வாஸ்து தவறுகள் தான் காரணம் என கூறப்படுகிறது. குறைந்த வருமானத்தில் பெரிய சேமிப்புகளைச் செய்ய விரும்பினால் இந்த விஷயங்களை கடைபிடிக்கவும். இதை செய்தால், லட்சுமி தேவியின் அருளால் செல்வச் செழிப்பு உண்டாகும்.

Authored byDevaki | Samayam Tamil 4 Jan 2023, 7:48 pm
வேதங்களில் வாஸ்து அறிவியல் குறித்த பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. நாம் செய்யும் சின்ன தவறு, பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சில விஷயங்களை நாம் பின்பற்றுவதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்கள் நமக்கு கிடைக்கும். இதனால், நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த பணம் உங்கல் வீட்டில் தங்கும்.
Samayam Tamil if you want to save big with less income do this vastu remedy
எவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு நிக்கலையா?-- அப்போ இதை செய்யுங்க!


இன்றைய வாழ்க்கையில், மக்கள் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், சம்பாதிக்கும் பணத்தை சம்பாதிக்க முடியாமல் செலவழித்துவிடுவார்கள். வாஸ்து படி, சில பழக்கங்களை நாம் செய்தால், நமக்கு நல்ல பலம் கிடைக்கும் என கூறப்படுகிறது. குறைந்த அளவு சம்பாதித்தாலும், பணத்தை சேமிப்பதற்கு சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அவை என்ன என்பதை நாம் காணலாம்.

​இதை வைத்து வீட்டை சுத்தம் செய்யுங்கள்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டை சுத்தம் செய்யும் போது தினமும் கடல் உப்பை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்து வந்தால், வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல் வெளியேறி, நேர்மறை ஆற்றல் சேமிக்கப்படும். மேலும், குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, தேவையற்ற செலவுகள் குறையும்.

இதனால் நீங்கள் நல்ல சேமிப்பைப் பெறுவீர்கள். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் வீட்டை உப்பு தண்ணீர் வைத்து துடைக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த மூன்று நாட்களை தவிர மற்ற நாட்களில் இதை செய்யலாம்.

​தூங்குவதற்கு முன் இதை செய்யவும்

இரவில் உறங்குவதற்கு முன் உங்கள் கால்களைக் கழுவவும். பின்னர், கால்களை நன்றாக உலர்த்திய பின்னரே படுக்கைக்குச் செல்லவும். இந்த பழக்கம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். இப்படி தினமும் செய்வதன் மூலம், உடலின் சோர்வு மற்றும் பதட்டம் நீங்கி, காலையில் எழுந்தவுடன், உங்களுக்குள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

இது உங்கள் இலக்கை அடைய உதவியாக இருக்கும். இது உங்கள் தூக்கத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது மற்றும் இந்த பழக்கம் உங்கள் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுகிறது. ஏனென்றால், சனிபகவான் ஒருவரின் கால்களை தான் முதலில் போற்றுவதாக கூறப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் அவரின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்.

​வீட்டிற்கு வெளியே இதை செய்யவும்

பொருளாதார முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை வலுப்படுத்த, வீட்டின் முன் குப்பைகளை குவிக்க அனுமதிக்காதீர்கள். அத்துடன் தினமும் வழிபாட்டுக்கு முன் வீட்டின் முன் கங்காஜலை தெளிக்கவும். இதைச் செய்வதன் மூலம், அன்னை லட்சுமி வீட்டிற்குள் வருவார்.

மேலும், வீட்டில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். மாலையில் வீட்டின் பிரதான வாசலில் இரண்டு விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வழிகளைத் திறக்கும்.

​ஆரத்தி செய்ய இதை பயன்படுத்தவும்

காலையிலும் மாலையிலும் ஆரத்தி செய்யும் போது கற்பூரம் ஏற்றி வழிபடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கற்பூர வாசனை வளிமண்டலத்தில் வேகமாக பரவி நேர்மறை மற்றும் தெய்வீக ஆற்றலை ஈர்க்கிறது என்று நம்பப்படுகிறது.

கற்பூரத்திலிருந்து வரும் புகை அண்ட ஆற்றலுடன் இணைந்து வீட்டில் நல்ல ஆற்றலை உண்டாக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும்.

​கனகதாரா ஸ்தோத்திரத்தை ஜெபிக்கவும்

லக்ஷ்மி ஸ்தோத்திரம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். பணத்தைப் பெறுவதற்கும் பணத்தை சேமிப்பதற்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லட்சுமி தேவியின் ஆசிகள் உங்கள் மீது நிலைத்திருக்கும்.

இந்த ஸ்தோத்திரத்தின் சிறப்பு என்னவென்றால், இது எந்த சிறப்பு ஜெபமாலையோ அல்லது வழிபாடு பாராயணமோ தேவையில்லை. நீங்கள் தினமும் லக்ஷ்மி ஸ்தோத்திரம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரத்தைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முன்னேறுவதுடன் பணத்தை சேமிக்கவும் உதவும்.

​இந்த பழக்கத்தை தவிர்க்கவும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, பலர் உணவு உண்ணும் போது படிக்கும் அல்லது வேலை செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இந்தப் பழக்கத்தைத் தவிர்க்கவும், அது உங்கள் பணத்துடன் பல விஷயங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.

நீங்கள் சாப்பிட்ட உடனேயே நீங்க உண்ட உணவு செரிமானம் ஆகிவிடும். அது உங்கள் செரிமான சக்தியையும் பாதிக்கும். இதன் காரணமாக பல உடல்நலப் பிரச்சினைகள் உருவாகத் தொடங்குகின்றன. எனவே இந்த பழக்கத்தை தவிர்க்கவும்.

எழுத்தாளர் பற்றி
Devaki
தேவகி ஜெகநாதன் "இதழியல் மற்றும் ஊடகவியல்" - சமயம் தமிழில் Digital Content Producer. ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்