ஆப்நகரம்

சனி பகவான் கொடுக்கும் பாடம் நெல்லிக்கனி போன்றது, ஏன் தெரியுமா?

சனி பகவான் எப்படிப்பட்ட பலன்கள் தருவார், அவர் எப்படிப்பட்ட காரகத்துவம் கொண்டவர், அவர் கொடுக்கக் கூடிய அனுபவத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்பது பற்றி இங்கு பாப்ர்போம்.

Samayam Tamil 6 Oct 2020, 1:38 pm
ஒருவருக்கு ஏழரை சனி இருந்தாலோ அல்லது சனி பார்வை இருந்தாலோ, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என இருக்கும் போது நாம் சில மோசமான பலன்களைப் பெறுவது வழக்கம். அவர் எப்படிப்பட்ட காரகத்துவம் கொண்டவர் என்பதை இங்கு பார்ப்போம்...
Samayam Tamil Lord Sani
Lord Sani


சனிக்கிரகத்திற்கு நெல்லிக்காய் போன்ற ஒரு நல்ல காரகத்துவமும் உள்ளது. அதாவது சனி பகவான் கொடுக்கும் அனுபவம் தான் அந்த காரகத்துவம்.

எந்த ஒரு மனிதரும் கஷ்டம் வந்த உடன் நெல்லிக்கனியைப் போல புளிப்பு, கசப்பு, உவர்ப்பு என பல விதங்களில் கஷ்டத்தை அணுகுகிறது. அதனால் நெல்லியின் சுவை பலருக்கு பிடிக்காததாக இருக்கிறது.

ஆனால் அது தரும் மருத்துவ குணங்களோ, அல்லது அதன் பின் தரும் இனிப்பு சுவை பற்றி பலரும் பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

  • சனி ராகு கேது சுக்கிரன் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷம் நீங்க எளிய பரிகாரம்!

சனிபகவானும், நெல்லியும் ஒன்றாக இருக்கிறது. முதலில் சனி பகவான் கொடுக்கக்கூடிய கஷ்டத்தை மட்டும் நினைத்து அனைவரும் கவலைப்படுகின்றனர். ஆனால் அந்த கஷ்டங்களிலிருந்து சனிபகவான் கொடுக்கக் கூடிய அனுபவத்தைப் புரிந்து கொள்வது தான் புத்திசாலித்தனம். இதை எளிதாக புரிந்து கொள்பவர்கள் தான் ஞானிகள்.

  • ஏழரை சனியாக இருந்தாலும் நல்ல பலன் பெற எளிய பரிகாரம் இதோ!

சிலர் சொன்னால் புரிந்து கொள்வார்கள். சிலர் அனுபவப்பட்டால் தான் புரிந்து கொள்வார்கள். அப்படி பிறருக்கு கிடைத்த அனுபவத்தை சொல்லும் போது புரிந்து கொள்ளாதவர்கள், கசப்பான பல அனுபவங்களை பட்டு தான் அனுபவத்தைப் பெறுவார்கள்.

  • சனி எப்போதும் கெடுதலை செய்வாரா? இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் சண்டையை ஏற்படுத்தும் - ஜோதிட கேள்வி பதில்

இப்படி அனுபவத்தால் புரியவைக்கக்கூடியவர் தான் சனி. எதிலும் முன் ஜாக்கிரதையுடன் வாழ்பவர்களுக்கு சனிபகவான் ஒரு சுப காரகத்துவத்துவன் இருப்பார்.

சிலருக்கு அவர்களின் ஜாதகத்தில் சனி மோசமான நிலையில் இருந்தால் அவர்கள் அனுபவப்பட்டுத் தான் புரிந்து கொள்ள வைப்பார் சனி பகவான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்