ஆப்நகரம்

மகா சிவராத்திரி 2024 தினத்தில் இந்த வழிபாடு மட்டும் செய்தால் ஏழரை சனி நடந்தாலும் சனி பகவானின் நல்லருளை பெற்றிடலாம்

மகாசிவராத்திரி தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய பரிகாரம், அபிஷேகம் என்ன?, மகரம், கும்பம், மீன ராசிக்கு ஏழரை சனி, கடகத்திற்கு அஷ்டம சனி நடக்கும் நிலையில், மகாசிவராத்திரி தினத்தில் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு, பரிகாரம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். Maha Shivaratri Story

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 8 Mar 2024, 10:12 am

மகாசிவராத்திரி 2024 எப்போது? செய்ய வேண்டிய வழிபாடு:

இந்தாண்டு மகாசிவராத்திரி மார்ச் 8ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த அற்புத தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை தரிசிப்பதும், பூஜை, அர்ச்சனை செய்வதும் நற்பலனை தரும். ஏழரை சனி நடக்கும் மகரம், கும்பம், மீனம், அஷ்டம சனி நடக்கும் கடகம் உள்ளிட்ட 12 ராசியை சேர்ந்தவர்களுக்கு சனியின் நல்லருளை பெற செய்ய வேண்டிய வழிபாடு, பரிகாரம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Samayam Tamil Maha Shivratri Worship


மேஷ ராசி

மேஷ ராசியினர் கரும்புச் சாறு மற்றும் நெய் ஆகியவை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யவும்.
ரிஷப ராசி
சுக்கிரன் ஆளக்கூடிய சுக்கிர ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் வெள்ளை நிற பூக்களை சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதும், சூட்டுவதும் நற்பலனை தரும்.
மிதுன ராசி
புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசியை சேர்ந்தவர்கள் சிவராத்திரி தினத்தில் ஈசனுக்கு வில்வ இலையால் அபிஷேகம் செய்யவும்.
கடக ராசி
அஷ்டம சனி நடக்கக்கூடிய கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு, சனியால் ஏற்படும் அசுப பலன்கள் குறைய, ஈசனின் அருள் கிடைக்க பால் அபிஷேகம், அரளிப் பூவால் அர்ச்சனை செய்யவும்.


மகா சிவராத்திரி மங்கள யோகம் பெறும் ராசிகள் : அதிர்ஷ்ட பலன்களை தரும் சனி பகவான்


சிம்ம ராசி

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர் அக்னிபுரீஸ்வரர் அருள் கிடைத்திடவும், சனியின் அசுப பலன்கள் குறைந்திடவும், வெல்லம் கலந்த பால் அபிஷேகம் செய்யவும்.
கன்னி ராசி
புதன் பகவானை அதிபதியாக கொண்ட கன்னி ராசியை சேர்ந்தவர்கள், அக்னீஸ்வரர் அருள் பெற்றிட சிவலிங்கத்தின் மீது ஊமத்தங்காய் பூ வைத்து அர்ச்சனை செய்யவும்.
துலாம் ராசி
சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி தினத்தில் அண்ணாமலையார் அருள் பெற்றிட சிவலிங்கத்திற்குப் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்..
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் அகஸ்தீஸ்வரரின் அருளை பெற்றிட மகா சிவராத்திரி தினத்தில் சிவ சாலிசா பாராயணம் செய்யவும். தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரை அபிஷேகம் செய்யவும்.

மகா சிவராத்திரி மறந்தும் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்


தனுசு ராசி

குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினருக்கு சிவபெருமானின் அருள் பெறவும், சனியின் தோஷம் குறையவும், மகாசிவராத்திரி அற்புத நாளில் “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
மகரம் ராசி
ஏழரை சனி நடக்கக்கூடிய மகர ராசியினர் சனியின் அசுப பலன்கள் குறைய, சிவ சாலிசாவை பாராயணம் செய்யவும். நல்லெண்ணெய், பழத்தை படைத்தல் வேண்டும். அபிஷேகம் செய்வதும் சனியின் தாக்கத்தை குறைக்கும்.
கும்ப ராசி
ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கக்கூடிய கும்ப ராசியினர் இந்த சிவராத்திரி அற்புத தினத்தில், சிவனின் நல்லருளை பெற்றிட கருப்பு எள் கொண்டு அர்ச்சனை செய்வதும், கங்கை நீரால் அபிஷேகம் செய்வதும் நல்லது.
மீன ராசி
ஏழரை சனி தொடங்கியுள்ள மீன ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் சனியின் தோஷம் குறைய சிவலிங்கத்திற்குப் பச்சைப் பால் அபிஷேகம் செய்யவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. இது ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான மற்றும் கூடுதல் தகவலுக்கு, தொடர்புடைய துறையில் உள்ள நிபுணரை அணுகவும்.
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்