ஆப்நகரம்

ஒரு நாடு, உலகத்திற்கான ஜோதிட பலன் எப்படி பார்க்கப்படுகிறது? - மேதினி ஜோதிடம் என்றால் என்ன?

தனி நபருக்கான ஜோதிட பலன்கள் ஜோதிடர்களை சொல்வதைப் பார்ப்போம். உலக நாடுகளுக்கான பலனை எப்படி கணிப்பது, அதற்கான ஜோதிட முறைகள் என்ன என்பதைப் பார்ப்போம்...

Samayam Tamil 14 Aug 2020, 9:56 am
ஜோதிடத்தில் ஒரு தனி நபரின் ஜாதகத்திற்கான பலன் கூறுதல் அல்லது ஒருவர் எழுப்பக் கூடிய தனிப்பட்ட கேள்விக்கான பலன் என ஜோதிடர்கள் கணிப்பதைப் பார்த்திருப்போம்.
Samayam Tamil World Astrology
World Astrology


இதே போல் ஒரு நாட்டிற்கான அல்லது முழு உலகத்திற்கான ஜோதிடப் பலனை கணிப்பதும் உண்டு. இந்த ஜோதிட கணிப்பில் உலகில் ஏற்படக் கூடிய இயற்கைச் சீற்றங்கள், மழை பெய்யும் அளவு, அதனால் வெள்ளம் ஏற்படுமா, வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும், சில முக்கிய நாடுகளில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்கள், சமூகத்தில் ஏதேனும் முக்கிய பிரச்னைகள் ஏற்படுமா, உலகளவில் ஏதேனும் கொள்ளை நோய்கள் ஏற்படுமா, பங்கு சந்தை ஏற்ற, இறக்கங்கள் எப்படி இருக்கும் போன்றவற்றை கணிக்க முடியும்.

சிம்ம ராசியில் சூரியன் : ஆட்சி அதிகாரத்தை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி ராசிகள்

மேலும் ஒரு நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் எப்படி மாற்றங்கள் இருக்கும் என்பதை ஜோதிடத்தில் கணிக்கும் முறை தான் மேதினி ஜோதிடம் அல்லது உலக ஜோதிடம் என அழைக்கப்படுகிறது.

மேதினி ஜோதிடம் என்பது சாதாரணமாக ஜோதிட பலன்களைக் கணிப்பவர்களால் உலக பொது பலனைக் கணிப்பது இயலாத ஒன்றாகும். இந்த மேதினி ஜோதிடத்தை கணிப்பவர்கள் ஆண்டு கிரக பலன்கள், வானத்தில் தோன்று சில அதிசய நிகழ்வுகள், மேலும் சகுனங்களின் அடிப்படையில் இந்த உலகத்திற்கான பொது பலன் கணிக்கப்படும்.

மேஷத்திற்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய் : சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் பலனடையும் ராசிகள்

உலக பலனைக் கணிப்பவர்களுக்கான அதற்கான சரியான பலனைக் கணிப்பதற்கான ஆதாரமாக இருக்கும் மூல நூல் பிருஹத் சம்ஹிதா என்ற நூலாகும். இந்த நூலின் ஆசிரியர் வராஹமிஹிரர் என்பவராவார்.

பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த ஜோதிட பலனைக் கணிப்பதில் ஞானம் பெற்றவராக இருக்க மாட்டார்கள். யாரெல்லாம் பஞ்சாங்க கணிப்பதில் வல்லவர்களாக அதை கற்றறிந்தவராக இருப்பவர்கள் தான் இந்த உலக பலனை கணிக முடியும். அதனால் இந்த ஜோதிடத்தை கணிப்பவர்கள் மிக குறைந்த அளவே உள்ளனர்.

இந்த ஜோதிடத்தை கணிப்பதில் வல்லவர்களாக சிவதாசன் ரவி மற்றும் திரு. நெல்லை வசந்தன் ஆகியோர் இதற்கான புத்தங்களை வெளியிட்டுள்ளனர் என சிவதாசன்ரவி அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார்.

உங்கள் வீட்டில் பீரோ எந்த இடத்தில், எந்த திசை நோக்கி வைத்தால் செல்வம் பெருகும்?

இந்த ஜோதிடத்தை கற்க அல்லது பலனைக் கணிக்க வெறும் ஜோதிட அறிவு மட்டும் இருந்தால் போதாது. அதைத் தவிர கீழ்க்காணும் துறைகளில் ஞானம் அவசியம் தேவை.

1) அரசியல்
2) பொருளாதாரம்
3) வரலாறு
4)புவியியல்

5) பொது அறிவு
6) பங்குச் சந்தை நிலவரம்
7) அன்றாட நாட்டு நடப்பு
8) பொது மருத்துவம்

9) வணிக சந்தை நிலவரம்
10) வான சாஸ்திரம்
11) சமூகவியல்
12) கலைத்துறை

அடுத்த செய்தி

டிரெண்டிங்