ஆப்நகரம்

ராகு கேது பகவான் விரத முறையும் காயத்ரி மந்திரமும்

உங்கள் ஜனன கால ஜாதகத்தில் ராகு அல்லது கேது திசை நடப்பவர்கள் அவர்களுக்குரிய விரதத்தை கடைப்பிடித்தும், காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Samayam Tamil 25 Aug 2020, 7:31 pm
ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நம் ஜாதக கிரக அமைப்பு, திசை புத்தி பொறுத்து ஜோதிட பலன் கணிக்கப்பட்டுச் சொல்லப்படுகிறது.
Samayam Tamil Rahu Ketu
Rahu Ketu


அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் தங்கள் ஜென்ம ஜாதகத்தைப் பொறுத்து திசை புத்தி கால அளவு இருக்கும்.

ராகு பகவானுக்குரிய விரத முறை:
அப்படி ஒருவருக்கு ராகு திசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ராகு கேது பெயர்ச்சி 2020ல் எந்த ராசிக்கு மிக அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது தெரியுமா?

ராகு போகக் காரர். இவர் ஒருவருக்கு அனைத்தின் மீதான ஆசை வைக்க தூண்டுவார். பிரமாண்டத்தை ஏற்படுத்துவார். அவரால் ஏற்படக்கூடிய சிக்கல்களிலிருந்து மீள்வதற்காக இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதிகாலையில் எழுந்து நீராடி காளி கோயிலுக்கு சென்று அங்கு வேப்ப எண்ணெய் விளக்கு ஏற்றவும். காளி அம்மனுக்கு மந்தார மலரால் அர்ச்சனையும். உளுந்தினால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பலகாரம் நிவேதனமாக்க வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

நவகிரஹ காயத்ரி மந்திரங்கள் மற்றும் நவகிரஹ சாந்தி ஸ்லோகம்

மேலும் கோமேதக கல்லை நாம் ஆபரணமாக அணிந்து கொள்வதோடு, நவகிரக சன்னிதியில் ராகு முன் நின்று நாம் அவருக்குரிய ராகு காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும்.

ராகு காயத்ரி மந்திரம்
நகத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாயக தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்


ராகு போற்றி பாடல்
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்யா போற்றி.


கேது பகவானுக்குரிய விரத முறை:
ஒருவரின் ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களுக்கோ அல்லது கேது நீச்சத்தில் இருந்தாலோ அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். செவ்வாய் கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி கணபதியை வணங்கவும். விநாயகர் கோயிலுக்குச் சென்று செவ்வரலி மாலை சுவாமிக்கு சூடி, கொள்ளில் செய்யப்பட்ட கொழுக்கட்டை, மோதகத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்கவும்.

கேது என்பவர் யார்? அவர் எப்படிப்பட்ட பலன்களை தருவார் தெரியுமா?

கேது திசை நடக்கும் காலத்தில் வைடூரிய கல் கொண்ட ஆபரணத்தை அணிந்து வரவும். நவகிரக சன்னிதியில், கேது பகவானுக்கு அருகில் நின்று அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வரவும்.

கேது பகவானுக்குரிய காயத்ரி மந்திரம்
அஸ்வத் வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ: கேது ப்ரசோதயாத்

உங்கள் ஜாதகத்தில் கேது சந்திரன் சேர்ந்திருக்கா? அப்போ இந்த அற்புத பலன்கள் உங்களுக்கு தான்


கேதுத் தேவே கீர்த்தி தேவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.

இந்த விரதம் செய்வதால் தன, தானியம், பசுக்காள் என அனைத்து செளபாக்கிய ஏற்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்