ஆப்நகரம்

கீழே கிடந்த பணத்தை எடுத்து பயன்படுத்தினால் அதிர்ஷ்டமா?, துரதிஷ்டம் துரத்துமா?

கீழே கிடந்த பணத்த எடுத்து பயன்படுத்தும் போது நமக்குள்ளே ஒருவித அச்சம் ஏற்படும், தீட்டு ஏற்படுவிடுமோ, பாவம் வந்துவிடுமோ என்ற மன உளைச்சல் ஏற்படும். அந்த பணத்தைப் பயன்படுத்தலாமா என்பதை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 18 Nov 2020, 1:18 pm
பணம் என்பது நம்முடைய முக்கியமான தேவைகளில் ஒன்று. இந்த உலகம் உணவுக்காகவும், பணத்திற்காகவும் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
Samayam Tamil indian currency
indian currency


உலகில் குறிப்பிடத்தக்க சில பணக்காரர்கள் சிலருக்கு தன்னுடைய பணம் கீழே விழுந்தால் கூட அதை எடுக்கமுடியாமல் ஓடக்கூடிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் அதை விட பல மடங்கு சம்பாதிக்கக்கூடியவர்கள் இருக்கின்றனர்.

ஆனால் உலகில் வாழும் பலர் தன்னுடைய சொந்த தேவைகளைப் போக்கிக் கொள்ளக் கூட பணம் இல்லாத வறுமை நிலையில் வாடுகின்றனர்.

நீங்கள் செய்யும் பரிகாரம் ஏன் பல நேரங்களில் பலனளிக்காமல் போகிறது?

சரி இப்போது கீழே கிடந்த பணத்தை, நாணயத்தை எடுப்பதால் எப்பட்டிப்பட்ட பலன்களை நாம் பெறுவோம் என்பதை இங்கு பார்ப்போம்.

நம்மில் பலர் சிறு வயதில் அவருக்கு தெரியாமல் அவரது பணத்தை எடுத்து விளையாடவும், தின்பண்டம் வாங்கியிருப்போம். அப்படி அடுத்தவரின் உழைப்பில் கிடைத்த பணத்தை எடுப்பதால் நமக்கு, அவரின் சாபம் விடுவாரோ என பயம் நமக்கு இருக்கும்.

ஆனால் அதுவே கீழே கிடந்த பணத்தை எடுக்கும் போது அப்படிப்பட்ட மன வருத்தமோ, பயமோ பெரிதாக வருவதில்லை. பெரிய தொகையாக இருந்தால், அதை தவறவிட்ட நபர் என்ன பாடுபடுகிறாரோ என்ற எண்ணம் வரும், இந்த பணத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

இந்த தினத்தில் கடன் கொடுத்தால் திரும்ப வருவது கஷ்டம்! - கடன் வாங்கினாலும் பிரச்னை தான்

கீழே கிடந்த பணம் அதிர்ஷ்டம் தருமா?, துரதிர்ஷ்டமா?
முதலில் பணத்திற்கு தீட்டு கிடையது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பணம் மகாலட்சுமியின் அம்சம். அப்படிப்பட்ட பணம் நமக்கி கீழே கிடந்து கிடைத்தால் அது பூமாதேவியின் வரமாக தான் பார்க்க வேண்டும். அதனால் பணம் அல்லது நாணயம் கீழே கிடந்தது என்றால் அதை எடுக்க எந்த தயக்கமும் காட்ட வேண்டியது இல்லை.

மன உளைச்சல் நீங்க என்ன செய்வது ?
கீழே கிடந்த பணம் யாருடையது என தெரியாமல் இருக்கும் வரை தான் அது நமக்கு சொந்தமானதாக பார்க்க வேண்டும். ஒரு வேலை அது யாருடையது என்பது தெரிந்துவிட்டால் அதை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.

உங்கள் வீட்டில் பீரோ எந்த இடத்தில், எந்த திசை நோக்கி வைத்தால் செல்வம் பெருகும்?

யாருடைய பணம் என தெரியாத போது, அந்த பணத்தை வைத்துக் கொள்வதில் பலருக்கு மன சஞ்சலமாக, உளைச்சலாக இருக்கும்.

ஒருவேளை உங்களுக்கு கீழே கிடந்து பணம் கிடைத்தால், அதை உஙள் பணம் பயன்படுத்துவது போல் இல்லாமல், பணத்தை எடுத்து நீரில் கழுவி பத்திரமாக வைத்துக் கொள்ளாலாம்.

இருப்பினும் உங்களுக்கு மன் உளைச்சலாகவே இருப்பின், கீழே கிடந்து எடுத்த பண அளவிற்கு, உங்கள் உழைப்பால் சம்பாதித்த பணத்தை கோயில் உண்டியலில் காணிக்கையாக சேர்த்து விட உங்கள் மன கலக்கம் நீங்கும்.

இதை மட்டும் செய்யுங்கள் சொந்த வீடே வாங்கிறலாம்... ஜோதிட ஆலோசனைகள்!

இப்படி நீங்கள் பணம் உண்டியலில் சேர்த்தால் உங்களுக்கு புண்ணியமும், கீழே கிடந்து எடுத்த பணத்தால் அதிர்ஷ்டமும் ஏற்படும்.

அதாவது கீழே கிடந்து ஒரு 200 ரூபாய் எடுக்கிறீர்கள் என்றால், அதே அளவு பணத்தை உங்கள் உழைப்பில் கிடைத்த பணத்தை உண்டியலில் செலுத்துங்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான பணத்தை நாம் வீண் செய்யாமல் சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்