ஆப்நகரம்

இருதார தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

ஒருவருக்கு இருதாரம் அமையும் என்று ஜாதகத்தில் உள்ள சில கிரக அமைப்பை வைத்து ஜோதிடர்கள் கூறுவதுண்டு. ஆனால் அதற்கான சரியான தோஷ பரிகாரம் என்று எதுவும் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படவில்லை.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 23 Nov 2022, 5:40 pm
பொதுவாக இருதார தோஷத்திற்கான பரிகாரம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் நம் முன்னோர்களால் சில பரிகாரங்களை பின்பற்றப்பட்டு வருகிறது.
Samayam Tamil Marriage


ஒருவருக்கு இருதாரம் அமையும் என்று ஜாதகத்தில் உள்ள சில கிரக அமைப்பை வைத்து ஜோதிடர்கள் கூறுவதுண்டு. ஆனால் அதற்கான சரியான தோஷ பரிகாரம் என்று எதுவும் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படவில்லை.

பொதுவாக ஜோதிடர்கள் ஒரு வாழைமரத்திற்குத் தாலி கட்டச் சொல்லி அதை வெட்டச் சொல்வார்கள். ஆனால் அந்த வாழை மரம் ஏற்கனவே வெட்டி எடுத்து வந்து அதற்கு தாலி கட்டச் சொவது தவறானது. ஏனெனில் அந்த வாழை மரம் ஏற்கனவே வெட்டப்பட்டு உயிரற்றதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.


சிலர் உயிருள்ள வாழை மரத்திற்கு தாலி கட்டும் வகையில் வாழைத் தோப்புக்கே சென்று, வாழை மரத்திற்குத் தாலி கட்டுவதும் உண்டு. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் பெண்களுக்கு கூட இந்த வாழை மர பரிகாரம் சொவது தான்.

எளிய பரிகாரம் :
ஒருவருக்கு இருதார தோஷம் இருக்கிறது என்றால், அந்த நபர் திருமணம் முடிந்த பின் 3 மாதங்கள் கழித்து அருகில் உள்ள பழமையான கோயிலுக்கு சென்று கட்டிய தாலையை, அந்த ஆலயத்தின் உண்டியலில் செலுத்தி விட்டு, அந்த ஆலய இறைவன் முன்னிலையில் மீண்டும் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளலாம். இப்படி செய்வதால் இருதார தோஷம் விலகும் . இந்த பரிகாரமானது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தக்கூடியது.
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்