ஆப்நகரம்

தொழில், வியாபாரத்தில் லாபமும், வீட்டில் ஐஸ்வர்யம் பெருக எளிய பரிகாரம் இதோ!

வீட்டிலும், தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை உயர் சிவ பெருமான எப்படி வணங்க வேண்டும் என்பதை இந்தபதிவில் பார்ப்போம்.

Samayam Tamil 17 Dec 2020, 1:43 pm
நாம் அனைவரும் நம்முடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதேனும் ஒரு உத்தியோகம் அல்லது தொழில் செய்து வருகிறோம். அடிப்படைத் தேவை பூர்த்தியானதும், நம்முடைய சேமிப்பு. ஆடம்பர வாழ்க்கை என அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம்
Samayam Tamil Lord Siva
Lord Siva



அப்படி தங்கள் வாழ்க்கையை வழிநடத்தப் பலர் தொழில், வியாபாரம் செய்வது வழக்கம். வியாபாரம் என்றாலே அதில் லாபமும், நஷ்டமும் ஏற்படுவது சகஜம் தான். என்றாலும் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கோ தான் முதலீடு செய்த தொகையை கூட திரும்ப பெறமுடியாத அளவிற்கு நஷ்டமும், லாபம் குறைவும் ஏற்படுவதுண்டு.

செல்வம் கொழிக்க ஒவ்வொரு ராசியினரும் சொல்ல வேண்டிய மந்திரம்


இப்படிப்பட்ட நஷ்டத்தால் மன வருத்தம் உண்டாவதோடு, வேறுவழியின்றி கடன் தொல்லைக்குள் சிக்குகின்றனர். இதிலிருந்து மீண்டு வர எளிய பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வர படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும்.


செல்வங்களின் அதிபதியாக விளங்கும் லட்சுமி தேவி, குபேரருக்கு நவநிதிகளை வழங்கியவர் சிவபெருமான்.

வீட்டில் பணம் நிலைக்கவில்லையா?இந்த எளிய ஜோதிட வழிகாட்டுதல் உங்களை செல்வந்தர் ஆக்கும்!

சிவனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை. அதனால் திங்களன்று அல்லது பிரதோஷ தினம் விசேஷமான கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த தினங்களில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். தொழிலில் லாபம் உண்டாகும்.


இந்த விரதம் ஈசனுக்கு உரிய கார்த்திகை திங்கட்கிழமைகளில் செய்வதும். அன்றைய தினம் மகாலட்சுமி அம்சமான பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபடுவதன் மூல சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்