ஆப்நகரம்

வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா?

வீடு, மனை வாங்கும் போது ஏன் வாஸ்து சாஸ்திரத்தை கவனிக்க வேண்டும். வாஸ்து பார்க்காமல் நாம் மனை வாங்குவதால் எப்படிப்பட்ட பிரச்னைகள் வரும் பார்ப்போம்...

Samayam Tamil 22 Oct 2020, 8:21 pm
வீடு கட்டுவதற்கு முன் இருக்கும் காலி மனையாக இருந்தாலும், வீடு கட்டப்பட்ட கட்டடமாக இருந்தாலும், வாஸ்து என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
Samayam Tamil Vastu For House
Vastu For House


வீட்டு மனையின் மணம், குணம், மண் வளம், அதன் பரப்பளவு, அது அமைந்திருக்கும் இடம் என அனைத்தும் வாஸ்துவைப் பொறுத்து அமையும். அது அங்கு கட்டக்கூடிய வீட்டில் குடியிருக்கும் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கிறது.


அதுமட்டுமல்லாமல் அங்கு குடியிருக்கக்கூடியவரின் ஜாதகமும், அதன் தசா புத்தியும் நன்றாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஜனன கால ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்கள், ‘நியூமராலஜி’ எனும் எண் கணிதத்தின் படி அவர்களின் மனையை மாற்றிக் கொண்டு பலனைப் பார்க்கலாம்.

ஒருவர் சொந்த வீட்டில் குடியிருந்தாலோ அல்லது வாடகை வீட்டில் குடியிருந்தாலோ அவர் குடியிருக்கும் இடத்தைப் பொறுத்து வாஸ்து பலன் அமையும்.

  • வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் பீரோ உள்ளிட்ட செல்வத்தை வரவழைக்கும் பொருட்களை எங்கு வைப்பது?
வீடு மட்டுமல்லாமல் ஒரு இடத்தில் கட்டப்பட்டிருக்கும் தொழிற்சாலை கட்டடத்திற்கும் பொருந்தும்.

சொந்த வீடோ, வாடகை வீடோ, தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு என எங்கு இருந்தாலும், நாம் வாழக்கூடிய இடம் வாஸ்துபடி இருப்பது அவசியம். அப்படி இல்லாவிட்டால் அவருக்கு ஏதேனும் வாஸ்து தொடர்பான பிரச்னைகள் வந்து கொண்டே தான் இருக்கும்.

நாம் சேமித்தோ, கடன் வாங்கியோ, நகை விற்று என பல சிரமங்களுக்கு இடையே கஷ்டப்பட்டு மனை வாங்கி வீடுகட்டுகிறோம். அது சரியாக கட்டுவது அவசியம். இல்லாவிட்டால் அதை நினைத்து, அவரின் பாதி ஆயுள் கவலையிலேயே முடிந்து விடும்.

அதனால் அடிப்படை வாஸ்து சாஸ்திர விதிகளையாவது நாம் சரியாக பார்த்து வீடு கட்டுவது அவசியம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்