ஆப்நகரம்

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு வாஸ்து பிரச்னை காரணமா?

அண்மையில் சமந்தா - நாக சைதன்யாவின் பிரபல தம்பதிகளின் பிரிவு சினிமா உலகத்தை அதிர வைத்த நிலையில், தற்போது ஸ்டார் குடும்பமாக இருக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்துச் செய்தி தற்போது பேச வைத்துக் கொண்டிருக்கின்றது.

Samayam Tamil 20 Jan 2022, 1:07 pm
இந்திய சினிமாவை அதிர வைத்துக் கொண்டிருக்கின்ற விஷயமாக தற்போது திரைப்பிரபலங்களின் விவாகரத்து செய்தி இருக்கின்றது.
Samayam Tamil Dhanush Aishwarya


அண்மையில் சமந்தா - நாக சைதன்யாவின் பிரபல தம்பதிகளின் பிரிவு சினிமா உலகத்தை அதிர வைத்த நிலையில், தற்போது ஸ்டார் குடும்பமாக இருக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்துச் செய்தி தற்போது பேச வைத்துக் கொண்டிருக்கின்றது.

இவர்களின் விவகாரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வாய் ரங்கநாதன் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

சினிமா திரைப்படங்கள் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை, விஷயங்களை கூறிவரும் இவர், தனுஷ் - ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு காரணங்களாகப் பல விஷயங்களை கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்னரும், திருமணமான பின்னரும் பல்வேறு பிரச்னைகள் இருவரிடையே இருந்ததாகவும், இருப்பினும் இவர்கள் திருமணம் செய்து கொண்டு 18 வருட கால திருமண வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

தன் பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க ஐஸ்வர்யா தனுஷை அருகில் இருக்க சொன்னதால், போயஸ்கார்டனின் ஒரு இடம் வாங்கிய தனுஷ் அங்கு ஒரு பங்களா கட்ட தொடங்கினார். இருப்பினும் அந்த இடத்தின் வாஸ்து சரியில்லை என தனுஷிடம் ரஜினி தெரிவித்ததாகத் தெரிகிறது.

இருப்பினும் அதைப் பற்றி பெரிதாக நினைக்காமல் வாங்கிய இடத்தில் கட்டடம் கட்டி வருகிறார். கட்டடம் கட்டி முடிக்கும் முன்னர் தம்பதிகளின் பிரிவு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்