லட்சுமணனை காக்க பறந்த மாருதி
இராமாயணத்தில் சீதையை மீட்க சென்ற இராமனின் சேனைகள், இராவணனின் சேனைகளுடன் போரிட்டது.
அப்போது ராவணனின் மகன் மேகநாதன் எனும் இந்திரஜித் பிரம்ம அஸ்திரத்தைத் தொடுக்க, வழியிலிருந்த சேனைகள் மயங்கி விழுந்தனர். கடைசியாக லட்சுமணனைத் தாக்கியது. இதனால் லட்சுமணன் மயங்கி சரிந்து விழுந்தான். லட்சுமணனை காப்பாற்ற மருந்து செய்ய மூலிகைகள் தேவை என்றார்.
கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்: வழிபடும் முறைகள்
உடனே அங்கிருந்த அனுமன் ராமனிடம், “நான் மூலிகைகளை தேடி கொண்டு வருகிறேன்” என்றார். சஞ்சீவினி மலையில் தான் இதற்கான மூலிகை உள்ளது என்றது. தான் அதை கொண்டு வர ராமனிடம் உங்கள் அருள் தாருங்கள் என்றார் அனுமன். ராமபிரானும் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
சீதைக்காக மட்டுமா ராமன் ராவணனை கொன்றார்?... உண்மையான காரணம் இதுதான்...
சஞ்சீவி மலையை எடுத்து சென்ற அனுமன்
மூலிகையை கொண்டு வரச் சென்ற அனுமனை தடுக்க நவகிரகங்களால் தான் முடியும் என்பதால் தன் தவவலிமையால் நவகிரகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராவணன் அனுமனை தடுக்க உத்தரவிட்டார்.
அனுமனை தடுப்பது தவறு என்பதை அறிந்தாலும், வேறு வழி இல்லாமல் சரி என ஒப்புக்கொண்டனர். இது சனிபகவானால் மட்டும் தான் முடியும் என்பதால் சனி பகவானை அனுப்பினர்.
சனிபகவானுக்கு தண்டனை வழங்கிய அனுமன்? ஏன் தெரியுமா?
லட்சுமணனுக்கு தேவையான மூலிகையை எடுக்க சஞ்சீவி மலையை அடைந்த அனுமனுக்கு மூலிகையை கண்டறிவதில் குழப்பம் ஏற்பட்டது. நேரம் விரயம் ஆகக்கூடாது என்பதால் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து கிளம்பினார்.
அனுமனை தடுத்த சனி பகவான்
சஞ்சீவி மலையை தூக்கு பறந்த அனுமனை சனி பகவான் தடுத்து மலையை எடுத்து செல்லக் கூடாது என்றார். அதற்கு அனுமன் “தற்போது நான் மிகுந்த அவசரத்தில் உள்ளேன். லட்சுமணனை காப்பாற்ற வேண்டும். என்னை தடுக்காதே. உன்னிடம் போரிடுவதற்கு நேரமில்லை” என்றார்.
ஆனால் சனிபகவான் விடுவதாக இல்லை. அதனால் சனியை கீழே தள்ளி தன் பலத்தால் அவரை அழுத்தினார். வலி தாங்க முடியாத சனி பகவான் கதறினார். தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார்.
ஆனாலும், அனுமன் விடுவதாக இல்லை. உடனே சனிபகவான் “ராமா, ராமா” என அழைத்தார். அதைக் கேட்டதும் அனுமனின் பிடி வலுகுறைந்தது. ராம நாமத்தை கூறியதால் தப்பினாய் என்றார்.
வேலூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில்
இனி ராம நாமம் யாரெல்லாம் கூறுகின்றனரோ அவரை நீ துன்புறுத்தக் கூடாது என எச்சரித்து அனுப்பினார். சரி என சனி பகவானின் சம்மதம் பெற்ற பிறகே அவரை விடுவித்தார்.
சனியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அனுமன் கோயில்
இப்படி சனி பகவானை தன் காலால் அழுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆஞ்சநேயரின் திருக்கோலம், வேலூர் மாவட்டம், ஆம்பூரில் பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஏழரை சனி நடப்பவர்கள், சனி தோஷம் உள்ளவர்கள், சனியால் கெடுபலனை அனுபவிப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வர சனி பகவானால் ஏற்படக்கூடிய தொல்லையிலிருந்து விடுபடலாம்.