ஆப்நகரம்

கடன் பிரச்னை தீர தேய்பிறை நாட்களில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தேய் பிறை சந்திரன் அடிப்படையாக வைத்தும் நாம் முக்கிய விஷயங்களைச் செய்யும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர். இன்றைக்கும் வளர்பிறையில் வரக்கூடிய சுபநாட்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 21 Nov 2022, 6:32 pm
வளர்பிறை, தேய்பிறை நாட்களில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Samayam Tamil moon

நாம் வீட்டில் சுப காரியங்கள் செய்யும் போது நல்ல நாள் எது, சுபமுகூர்த்த தினம் எப்போது என பார்த்து, பார்த்து செய்வது வழக்கம். குறிப்பாக வளர்பிறை, தேய்பிறை நாட்களில் எப்படிப்பட்ட விஷயங்களை செய்தால் நற்பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

ஜோதிடத்தில் சந்திரன் மிக முக்கிய கிரகமாக பார்க்கப்படுகிறது. நம்முடைய ராசியே சந்திரன் அமைந்திருக்கும் இடத்தை வைத்து தான் கணிக்கின்றனர்.

சந்திராஷ்டமம் எப்படி கணக்கிட வேண்டும், எளிய பரிகாரம் இதோ!
அதே சமயம் வளர்பிறை, தேய் பிறை சந்திரன் அடிப்படையாக வைத்தும் நாம் முக்கிய விஷயங்களைச் செய்யும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர். இன்றைக்கும் வளர்பிறையில் வரக்கூடிய சுபநாட்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.

வளர்பிறையில் செய்ய வேண்டிய சுப காரியங்கள் :
திருமணம், புதிய வீட்டிற்கு கிரகப் பிரவேசம் போன்ற விசேஷங்களுக்கு வளர்பிறையைத் தேர்வு செய்வது நல்லது. அதாவது வளர்பிறை போல திருமண தம்பதிகள் இருவரும் பிரகாசமாக வளர்ந்து 16 செல்வங்களும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகத் தேர்வு செய்கின்றனர்.

சந்திராஷ்டமம் தினத்தில் என்ன செய்ய கூடாது? எப்படி நடந்து கொள்ள வேண்டும் முக்கிய விளக்கம் இதோ
அதே போல கிருகப்பிரவேசம் வளர்பிறை நாட்களில் வைப்பதால் நாம் குடிபுகும் வீட்டில் எந்த தொந்தரவும் இல்லாமல், வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும். அந்த வீட்டில் அனைத்தும் விஷயங்களிலும் வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்ற வகையில் வளர்பிறை தேர்வு செய்கின்றனர்.
குழந்தை முதன் முதலில் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கும். ஒருவர் முதன் முதல் வேலையில் சேருவது. வியாபாரம், தொழில் தொடங்குவதற்கு, புதிய வீடு கட்ட தொடங்குவதற்கு என முக்கிய விஷயங்களை வளர்பிறை சுப நாட்களில் செய்வது முக்கியம் என சொல்கின்றனர்.

சந்திராஷ்டம தினத்தில் 12 ராசியினர் எப்படிப்பட்ட நற்பலன்களைப் பெறுவார்கள்?

தேய்பிறை நாட்களில் செய்ய வேண்டியது என்ன?
தேய்பிறை என்பது குறைந்து கொண்டே செல்வதாகும். அதாவது நம்முடைய உடல் நல பாதிப்புக்கும், நோய்க்கும் மருந்து எடுத்துக் கொள்ள தேய்பிறையைத் தேர்வு செய்வதால் உடல் நலப்பிரச்னைகள் தேய்ந்து கொண்டே சென்று நோய் தீரும்.
அதே போல அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேய்பிறை நாட்கள் நல்லது. வழக்கு விவாதங்களில் வெற்றி பெற தேய்பிறை நல்லது.
கடன் வாங்குவதற்கு மட்டுமல்லாமல், கடன் அடைப்பதற்கு தேய்பிறை மிகவும் நல்லது.
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்