ஆப்நகரம்

கண்களில் கோளாறு எதனால் ஏற்படுகிறது... ஜோதிடம் சொல்லும் விளக்கம் இதோ

நம் கண்களில் ஏற்படும் கோளாறுகள் எந்த கிரகத்தால் ஏற்படக் கூடும் என்பதை ஜோதிட குறிப்புகள் சொல்வதைப் பார்ப்போம்...

Samayam Tamil 25 Apr 2020, 2:37 pm
நம் வாழ்க்கையில் நடக்கக் கூடிய நிகழ்வுகள் மற்றும் நம் ஆரோக்கியத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் எல்லாவற்றிற்கும் நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றது.
Samayam Tamil Eye Horoscope
Eye Horoscope


அப்படி நம் கண்களில் ஏற்படக் கூடிய கோளாறுகள் எதனால் ஏற்படுகிறது. அதற்கான கிரக அமைப்பு என்ன என்பதைப் பார்ப்போம். கண்களின் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய ஜோதிட அமைப்பு ஒருவரின் 2ம் வீடு மற்றும் 12ம் வீடு ஆகியவை பொறுத்து அமையும்.

இதில் 2ம் வீடு நம்முடைய வலது கண்ணையும், 12ம் வீடு நம் இடது கண்ணைக் குறிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவை வைத்து தான் நம் கண்களில் ஏற்படக் கூடிய கோளாறு,நோய் உள்ளிட்டவை ஏற்படுகிறது.

எந்த ராசியினர் எந்த நோயால் பாதிக்கப்படுவர் தெரியுமா?- எப்படி காத்துக் கொள்வது?

2ம் வீட்டின் அதிபதி சுக்கிரன், 12ம் வீட்டு அதிபதி குரு இவர்கள் அமைந்திருக்கும் அமைப்பால் ஏற்படும் கண் பிரச்னையை பார்ப்போம்.

ஒருவரின் ஜாதகத்தில் 2ம் வீட்டு அதிபதியான சுக்கிரன் 6,8,12ல் மறைந்து இருந்தாலோ அல்லது பகை, நீச்சம் பெற்று இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட 6,8,12ல் இருந்தாலோ வலது கண்ணில் கோளாறு ஏற்படக் கூடும்.

நவகிரகங்கள் எப்படிப்பட்ட நோய்களை ஏற்படுத்தக் கூடும்? - எப்படி பாதுகாத்துக் கொள்வது?

அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் குறிப்பிட்ட சில இடங்களில் அமர்வதால் பகை, நீச்சம் பெறும் அம்சத்தில் இருந்தாலோ அல்லது ராசியிலேயே காணப்பட்டால் கண் கோளாறு ஏற்படக் கூடும்.

அதுமட்டுமல்லாமல் சூரியன், சுக்கிரன் இணைந்து கெட்டு பலவீனமடைந்து இருந்தால் கண்ணில் புரை, கண் கோளாறு ஏற்படக் கூடும்.

ஒரு முறை சொன்னால் 7 தலைமுறை பாவங்களை போக்க கூடிய சிவ மந்திரம் இதோ!

மேலும் சூரியன், சந்திரன் இவை இரண்டும் 6,8,12 என ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பதால் அந்த ஜாதகருக்கு மாறு கண் பிரச்னை அல்லது கண் கோளாறு ஏற்படக் கூடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்