ஆப்நகரம்

எந்த திசையில் தலைவைத்து படுப்பது நல்லது... என்ன பலன் தரும் தெரியுமா?

எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும் என புராணங்கள் மற்றும் அறிவியல் கூறுகின்றது என்பதையும், அதனால் நம் உடல்க்கு ஏற்படும் நன்மையை பார்ப்போம்.

Samayam Tamil 30 Oct 2019, 4:37 pm

எந்த திசையில் தலைவைத்து படுத்தால் நன்மை தரும் என்பது பலரும் அறிந்த விஷயமாக இருந்தாலும், அதை தகுந்த காரணத்துடன் தெரிந்து கடைப்பிடிப்பதும், உங்களின் குழந்தைகளுக்கு சொல்வதன் மூலம் அவர்கள் கடைப்பிடிக்கத் தொடங்குவார்கள்.
Samayam Tamil Best Direction To Sleep


எந்த திசை நல்லது?
நம் சொந்த வீட்டில் தூங்கு போது, நாம் கிழக்கு திசையில் நம் தலைவைத்து படுக்க வேண்டும்.

மாமனார் வீட்டில் தூங்கு போது, நாம் தெற்கு திசையில் நம் தலைவைத்து படுக்க வேண்டும்.

வெளியூரில் நாம் சென்று தங்கும் போது, மேற்கு திசையில் தலைவைத்து படுக்க வேண்டும்.

ஆனால் எந்த காரணத்துக்காகவும், வடக்கு திசையில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. என நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

தாம்பத்தியத்திற்கான சரியான நேரம்... சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?

இந்த காலத்து பிள்ளைகள் எந்த விஷயத்தை சொன்னாலும் அதனை அவர்கள் கேட்பதில்லை என பெற்றோர் புலம்புவதுண்டு. ஆனால் அதற்கு நாம் சரியான காரணம் செல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றது.
வடக்கில் தலைவைத்து படுக்காதே என கூறினால், நான் எந்த திசையிலாவது தலைவைத்து படுக்கிறேன், உங்களுக்கு என்ன பிரச்சினை என நம்மை கேட்பது உண்டு.

புராண காரணம் :
ஒரு முறை விநாயகர் மனித முகத்துடன் இருக்கும் பொழுது, அங்கே வந்த சிவ பெருமான், பார்வதி தேவியைப் பார்க்க செல்லும் போது, விநாயகர் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என அன்னை உத்தரவிட்டுள்ளார். அதனால் நீங்கள் உள்ளே செல்லக் கூடாது என தடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதனால் கோபத்தில் விநாயகரின் தலையை துண்டித்தார்.

இதனால் துயரடைந்த பார்வதி தேவியை, அதிலிருந்து மீட்க, விநாயகருக்கு வேறு தலை வைக்க நினைத்து, பூத கணங்களிடம் வடக்கில் தலைவைத்து படுத்திருக்கும் ஒருவரின் தலையை வெட்டி கொண்டு வாருங்கள் என்றார்.

அதன் படி அவர்கள் அலைந்து திரிந்து வடக்கில் தலைவத்து படுத்திருந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொண்டு வந்து கணபதிக்கு பொருத்தினர். என புராண கதை கூறுகின்றது.

கணபதி உருவான புராண கதை : யானை முகம் எப்படி வந்தது தெரியுமா?

அறிவியல் காரணம் :
இதனை அறிவியல் ரீதியாகப் பார்க்கலாம்... புவியின் வடக்கு துருவம் மிகுந்த காந்த சக்தி கொண்டது. நாம் வடக்கு நோக்கு நம் தலையை வைத்து படுக்கும் போது இந்த காந்த சக்தி நம் மூளையை தாக்கும்.

இதனால் நம் மன நிலை குழம்பிய நிலை அடையும். ஆழ்ந்த தூக்கம் நமக்கு வருவது தடைப்படும். தூக்கம் தடைப்படும் போது நம் உடல் நலம் பாதித்து, ஆரோக்கியம் இழக்கும் அபாயம் ஏற்படும். இதனால் வடக்கில் நாம் தலையை வைத்து படுக்கக் கூடாது என கூறுவதுண்டு.

சாப்பிடுவதற்கு ஏற்ற திசை எது?

நட்புக்கு இலக்கணமான கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையாரின் கதை கேட்டிருப்போம். அவர்கள் இருவரும் நட்பிலும் சிந்தனையில் மட்டும் ஒரே மாதிரியாக நில்லாமல், இருவரும் வடக்கிருந்து உயிரை விட்டதாக நம் சங்க தமிழ் கூறுகின்றது.

சமண சமயத்தில், ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் தன் உயிரை துறக்க நினைக்கும் போது அவர் வடக்கிருத்தல் எனும் விரதத்தை மேற்கொள்வார். இதற்கு சள்ளேகனம் என கூறுவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்