ஆப்நகரம்

நீங்கள் செய்யும் பரிகாரம் ஏன் பல நேரங்களில் பலனளிக்காமல் போகிறது?

நம்மில் பலர் பல வழிபாடு, பரிகாரம் செய்வதைப் பார்த்திருப்போம். ஆனால் அதற்கான பலன்கள் கிடைத்து விட்டதா என்றால் இல்லை என பதில்கள் வரக்கூடும். ஏன் சில பரிகார்ங்கள் பலனளிப்பதில்லை என்பதை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 31 Oct 2020, 10:18 pm
ஜோதிடத்தில் ஒருவருக்கு கிரக நிலை சரியாக அமையாமலும், மோசமான திசை புத்தி நடக்கும் போது அந்த ஜாதகருக்கு மோசமான பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.
Samayam Tamil Pooja Room
Pooja Room

ஆன்மிக ரீதியாக பார்க்கும் போது நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கான நல்ல மற்றும் கெட்ட பலன்கள் கிடைக்கும்.

நமக்கான கர்ம வினைப்பலன்கள் தீர அதற்கேறார் போல சில பரிகாரங்கள் சொல்லப்படுகின்றன.

ஆனால் சில பரிகாரங்கள் செய்யும் போது அதற்கான பலன்களை நமக்கு உடனே கிடைக்கிறது. சில பரிகாரங்கள் செய்து பல காலமாக அதற்கான பலன்கள் கிடைப்பதில்லை.

கர்ம வினைகளும், அதற்குரிய பரிகாரம் என்ன, சில பரிகாரங்கள் ஏன் பலனளிக்காமல் போகின்றது என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.

குரு சந்திர யோகம் என்றால் என்ன? - எப்படிப்பட்ட கிரக அமைப்பு நல்ல பலனைத் தரும்?

வழிபாடு பலனளிக்குமா?
ஒருவர் என்ன தான் வழிபாடு செய்தாலும், பரிகாரங்கள் செய்தாலும் அவரின் துன்பங்கள் நீங்காமல் தொடரும். அதற்கு கர்மவினை காரணமாக இருக்கும். நாம் பரிகாரம் செய்வதற்கு முன் எந்த கர்மவினை நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டு நாம் அதற்கேற்றார் போல பரிகாரங்கள் செய்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் என்பது ஜோதிடர்களின் அறிவுரையாக இருக்கிறது.

குறைந்தபட்சம் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வதும், அவர்களின் வாழ்த்து கிடைப்பதன் மூலம் குறைந்தபட்சம் அடுத்த தலைமுறையினருக்காவது அந்த பாவம் தொடராமல் இருக்கும்.

த்ருத அத்ருத கர்மா :
ஒருவர் தான் செய்தது தவறு என உணர்ந்து மன்னிப்பு கோருதல் அல்லது வருத்தப்படுதல் த்ருத் அத்ருத கர்மா. இந்த பாவமும் அடுத்த பிறவியில் தொடரும். இவர்களின் ஜாதகத்தில் லக்கினம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது 9ம் அதிபதியின் பார்வை பலன் இருக்கும். இந்த கர்ம வினை பாவங்களால் ஏற்படும் மோசமான பலன்களை அதற்கான பரிகாரங்களை செய்வதன் மூலம் சரி செய்ய முடியும்.

அத்ருத கர்மா : முன் ஜென்மத்தில் இது பாவம் என தெரியாமல் செய்த வினைகள் இந்த பிறவியில் தொடரும். இருப்பினும் இந்த பாவங்களை இறை வழிபாடு செய்வதால் அவரின் அருளால் மன்னிப்பு கிடைக்கும். இந்த பாவங்களை தீர்த்துக் கொள்ள இறை வழிபாடு ஒன்று போதுமானது. அதற்கான பரிகாரங்கள் செய்யக் கூட தேவையில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்