ஆப்நகரம்

அரசு வேலை கிடைக்குமா? - ஜோதிடரின் பதில்

குரு திசையில் ராகு புத்தி நடக்கும் சரத் உதய குமாருக்கு எப்போது வேலை கிடைக்கும் என ஜோதிடர் திண்டுக்கல் சின்னராசு ஆலோசனை கூறியுள்ளார்.

Samayam Tamil 10 Sep 2019, 8:27 pm
திரு சரத் உதயகுமார் அவர்களுக்கு வணக்கம் உங்கள் ஜாதகத்தில் தற்பொழுது நடந்து கொண்டிருப்பது குரு திசையில் ராகு புத்தி ஆகும். 2021 நவம்பர் மாதம் இந்த குரு தசை முடிந்து சனி திசை ஆரம்பமாகும்.
Samayam Tamil job 1


சனி திசையில் உங்களுக்குத் தனியார் துறையில் நிரந்தரமான நல்ல வேலை வாய்ப்பு வெளியூரில் அமைய வாய்ப்பு உள்ளது.



இதை தவிர்த்து அரசுத்துறை தொழிலுக்கு முயற்சி செய்ய வேண்டாம். ராஜ கிரகங்கள் என்று சொல்லப்படும் சூரியனும், செவ்வாயும் நல்ல நிலைமையில் தான் இருக்கின்றன. இருந்தாலும் நடக்கும் குரு திசை உங்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதில் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த குரு தசை முடிந்தவுடன் சனிதசை ஆரம்பமாகும். 4, 5க்கு அதிபதியான சனி வக்ரம் பெற்றிருப்பதால் இடம் விட்டு அல்லது ஊர் விட்டு ஊர் மாற்றி நல்ல நிரந்தரமான வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம்.

Pariharam For Job: வேலை விரைவில் கிடைக்க இந்த பரிகாரம் செய்யுங்கள்...

இந்த சனியை குரு பார்ப்பது மேலும் விசேஷமானது. எனவே நீங்கள் சனி தசையில் உங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைவீர்கள். பின்னர் வரும் புதன் திசை சொந்த தொழில் செய்ய வைக்கும். அதில் நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள். ஏழாம் இடத்தில் இருக்கும் செவ்வாய் உங்களுக்கு சந்தோஷத்தை தர வழி இல்லை. செவ்வாய் திசை 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருகிறது. அதற்கு பின்னால் வேண்டும் என்றால் இன்னொரு மனைவியை கட்டிக்கொள்ளலாம். எனவே ஏழாமிட செவ்வாய் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை. தார தோஷம் இல்லை. உங்களுடைய தொழில் வாய்ப்புகள் குருதிசை முடிந்தவுடன் மிகச் சிறப்பாக அமையும். கவலை கொள்ள வேண்டாம்.

கூடல் நகரத்து ஆடவல்லான் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் அருள்வாராக...

திருச்சிற்றம்பலம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்