ஆப்நகரம்

பருவ வயதில் திருமணங்கள் நடைபெறாமல் காலம் தாழ்த்தி நடக்கும் ஜாதகங்கள் அமைப்பு எவ்வாறு இருக்கும்

பருவ வயதில் திருமணம் ஆகாமல் தள்ளிப் போவதற்கான ஜோதிட காரணங்கள் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கொடுத்த பதிலை பார்ப்போம்...

Samayam Tamil 19 Jul 2020, 7:38 am

திருமண தாமதம் என்பது ஜாதக ரீதியாக வருவது ஒருபுறம் இருந்தாலும் சமுதாயத்தின் நாகரீக வளர்ச்சி யினால் திருமணம் தாமதம் அடைகிறது என்பதே உண்மை ஒரு ஆணுக்கு திருமணம் என்பது முந்தைய காலங்களில் 16 வயதாகவும் பெண்ணுக்கு திருமண வயது என்பது 12 வயதாகவும் கணக்கிட்டு இருந்தார்கள். ராமபிரானுக்கு திருமணம் நடைபெற்ற பொழுது அவருடைய வயது 16 சீதாபிராட்டிக்கு 12 வயதாகும். இவ்விரண்டையும் கூட்ட 28 என்று வரும் இவர் இதில் சரிபாதி 14 ஆகும். ஆகவே 28 வயது என்பது ஒரு தலைமுறைக்கான காலம் ஆகும் இதில் சரிபாதியை ராமபிரான் கானகத்தில் கடிக்க வேண்டும் என்று கைகேயி கட்டளையிட்டது. ஒரு தலைமுறை காலத்தில் பாதியை கழித்து விட்ட பின் அரியணை ஏறும் முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டுவிடும். தொடர்ந்து தனது மகன் பரதனே ஆட்சி செய்யலாம் என்பது போன்ற காரணங்களால் தான் .
Samayam Tamil Marriage 3A


பெண் பார்த்து சலித்துப் போய் விட்டேன்... எப்போது பெண் கிடக்கும்? - ஜோதிடரின் பதில் இதோ...

நவீன காலங்களில் திருமண வயது அரசாங்கத்தினால் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அரசாங்கம் நிர்ணயம் செய்த திருமண வயது என்னவோ ஆணுக்கு 21 ம் பெண்ணுக்கு 18ம் தான் ஆனால் நவீனகால திருமணங்கள் ஆணுக்கு 30 வயது 35 வயது என்று மிகவும் காலதாமதமாக தான் நடக்கிறது. அதே போன்று ஒரு சில பெண்களுக்கும் திருமணத்தின் போது 30 வயதை நெருங்கி விடுகிறார்கள். இதற்கான காரணம் ஆண்களைப் பொருத்தவரை தங்கள் படிப்பிலும் வேலையிலும் நிரந்தரமாக வருமானத்திலும் நிலையாக அமர்ந்த பிறகுதான் திருமணம் என்ற பந்தத்திற்குள் சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள மன தைரியம் வருகிறது. அதற்கு முன்னால் இவர்களால் பொறுப்பை ஏற்று நடத்தும் தன்னம்பிக்கை இருப்பதில்லை. இப்பொழுது திருமணத்திற்கு என்ன அவசரம் என்ற கேள்வியோடு முப்பது வயதையும் கடந்து விடுகிறார்கள்.

அனைத்து ராசிகளுக்கான காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்?
தலை நரைத்த பின் இளநரை என்று சொல்லிக்கொண்டு பெண் பார்க்கும் படலத்தை துவக்குகிறார்கள். காதோரத்தில் வந்த ஒரு நரைமுடி தசரத சக்கரவர்த்தி அரியணையில் இருந்து இறங்கிக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை மகனுக்கு தந்து விட முடிவு எடுக்க உதவியது. ஒரு முடி நரைத்த போதே தசரதன் ரிட்டயர்மென்ட் நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் தற்காலத்தில் முழுமையும் நரைத்த பிறகுதான் குடும்பத்தை துவக்குவதற்கு வாழ்க்கை துணையை தேடுகிறார்கள் திருமணம் தாமதமாவதற்கு பொருளாதாரம்தான் மிக முக்கியமான காரணமாக அமைந்துவிடுகிறது..

பலராலும் ஏமாற்றப்பட்டு பெயரையும் மதிப்பையும் இழந்த என் வாழ்க்கை மீளுமா?- ஜோதிடரின் பதில்

பெண்களின் திருமணத்தைப் பொருத்தவரை வருகின்றவன் கைநிறைய சம்பாதிக்க கூடியவராக இருக்கிறாரா நன்றாக படித்திருக்கிறாரா அமெரிக்கா வாழ்க்கை இருக்கிறதா கிரீன் கார்டு வைத்துள்ளாரா ? என்பது போன்ற கேள்விகளுக்கு சாதகமான பதில்கள் வந்தால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். மேலும் பெண்களும் பல பட்டப் படிப்புகளை படிக்க நேர்வதால் காலதாமதம் என்பது தவிர்க்க இயலாத ஒரு விஷயமாக போய்விட்டது. திருமணம் என்ற வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வை கடைசியில் கொண்டு போய் போட்டு விட்டார்கள். அதனால்தான் வீடு கட்டி விட்டு வாகனம் வாங்கி விட்டு வெளிநாடு சென்று விட்டு சொத்து வாங்கிவிட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிடுகின்றனர். இவை அனைத்தையும் தாண்டி கடைசி முயற்சியாக திருமணம் என்ற இடத்திற்கு வந்து ஜாதகத்தை எடுக்கும் பொழுது உங்களுக்கு ஜாதகத்தில் பலவகையான தோஷங்கள் உள்ளதால் இன்னும் திருமணம் தாமதமாகும் என்ற தகவலை கேட்கும் பொழுது மனம் உடைந்து விடுகிறது. வாழ்கையின் ஒரு பாதி தனிமையிலே வாழ்ந்து ஆகிவிட்டது என்ற சலிப்பு தன்மையும் வந்துவிடுகிறது...

அடுத்த செய்தி

டிரெண்டிங்