ஆப்நகரம்

திருமணம் என்ற ஒன்று வாழ்க்கையில் இருக்கிறதா? அல்லது சன்னியாசியா ?- ஜோதிடரின் பதில்

என் வாழ்வில் திருமணம் என்று ஒன்று இருக்கிறதா? ஆன்மீகத்தில் அதிக ஆர்வமும் உள்ளது. உங்கள் கருத்தை நாடுகிறேன். என மைத்திரேயன் என்பவர் கேட்ட கேள்விக்கு ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கொடுத்த பதிலை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 4 Jul 2019, 8:57 pm
Maitreyan Aஐயா வணக்கம், என் வாழ்வில் திருமணம் என்று ஒன்று இருக்கிறதா? ஆன்மீகத்தில் அதிக ஆர்வமும் உள்ளது. உங்கள் கருத்தை நாடுகிறேன். 3/2/1988 2pm திருப்பூர்
Samayam Tamil Marriage


உங்களுடைய ஜாதகத்தில் திருமணம் கால தாமதமாக அதனால்தான் இம்மாதிரியான கேள்விகள் எல்லாம் உங்கள் மனதில் எழுகிறது. முதலில் திருமணத்திற்கு எது தடையாக இருந்தது ஏன் திருமணம் காலதாமதம் ஆகிறது என்பதை புரிந்து கொண்டால் மற்ற விஷயங்கள் எளிதில் புலப்படும். உங்கள் ஜாதகத்தின் படி ரிஷப லக்னம் கடக ராசி லக்கினத்திற்கு ஏழாம் இடத்து அதிபதியான செவ்வாய் ஏழாமிடத்தில் ஆட்சி பெற்று நிற்கிறார்.


ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் ஏழாம் இடத்தில் இருக்கும் போது திருமணம் கால தாமதமாக வரை தவிர்க்க முடியாது. எனவே உங்கள் திருமணம் கால தாமதம் ஆனதற்கு இயலில் நிற்கின்ற செவ்வாய் முழு பொறுப்பு ஏற்கிறார். இது செவ்வாய் தோஷம் அல்ல காரணம் ஆட்சி வீட்டில் செவ்வாய் இருப்பதால் தோஷம் கிடையாது. இருப்பினும் அவர் ஆட்சியாக இருப்பது திருமணம் தாமதமாவதற்கான முக்கியமான காரணமாகும். மேலும் உங்களுக்கு நடக்கும் தசா புத்தி சுக்கிரனின் திசை சுக்கிரன் அஷ்டமாதிபதியான குருவின் சாரம் பெற்று நிற்பது தொழிலிலும் பொருளாதாரத்திலும் சமுதாய அந்தஸ்திலும் உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுவிடும். இருப்பினும் வாழ்க்கையில் செட்டில் ஆவது என்பது காலதாமதமாக தான் செய்யும். இந்த சுக்கிர திசை உங்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பது சிரமம் எதிர்வரும் சூரியன் திசை சந்திர புத்தியில் அதாவது 2021 ஜூன் மாதம் முதல் 2021 நவம்பர் மாதத்திற்குள் உங்களுக்கு திருமணம் முடிவதற்கான வாய்ப்பு கூறுகள் வலுவாக உள்ளது. மேலும் ஆன்மீக எண்ணம் மேலோங்குவதால் சாமியாராக போக முடியுமா என்பது போன்ற கேள்வியை கேட்டு இருந்தீர்கள்.
உங்களால் நிச்சயமாக ஆன்மீகத்தை நோக்கி செல்ல முடியாது. இல்லறத்தில் இருந்து கொண்டு ஆன்மீகத்தை பெண் தொடரலாமே தவிர முழுமையான சாமியார் வாழ்க்கை என்பது கிடையாது. அதை மீறி நீங்கள் சாமியார் ஆனால் போலி சாமியாராக வேண்டுமானால் முடியுமே தவிர அசல் சாமியாராக முடியாது. ஆகவே இம்மாதிரியான எண்ணங்களைத் தவிர்த்து திருமணத்துக்கான முன்முயற்சிகளை முன்னெடுக்கவும் சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல குடும்பம் உங்களுக்கு அமைய காத்திருக்கிறது. உங்கள் குடும்பத்திற்கு வாரிசும் உண்டு ஆகவே கவலை கொள்ள வேண்டாம்.

திருச்சிற்றம்பலம் !!

அடுத்த செய்தி

டிரெண்டிங்