ஆப்நகரம்

உங்களுக்கு திருமணம் நடக்குமா? நடக்காது? எப்படி தெரிந்து கொள்வது?

ஒருவருக்கு அவரது ஜாதகப்படி திருமணம் நடக்குமா? நடக்காதா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 22 May 2019, 11:37 am
ஒருவருக்கு அவரது ஜாதகப்படி திருமணம் நடக்குமா? நடக்காதா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Marria


மலேசியாவில் கோலாலம்பூரைச் சேர்ந்த அம்மு என்பவருக்கு ஜோதிட ஆர்வம் வந்ததோடு, திருமணம் ஆகவில்லை என்ற கவலையும் வந்துள்ளது. இதையடுத்து, இவரது ஜாதகத்தை திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ்க்கு அனுப்பி வைத்து, எப்போது திருமணம் நடக்கும் என்ற கேள்வியை கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஜோதிடர் கூறியிருப்பதாவது:

இவருடைய ஜாதகத்தில் லக்கினம் மேஷம் ஆகி இரண்டாம் இடத்தில் ராகுவும் ஏழாம் இடத்தில் சனியும் இருப்பது காலதாமதமான திருமணத்திற்கு காரணம் ஆகும். பொதுவாகவே சனி ஏழில் இருப்பது திருமணத்தை தாமதப்படுத்தும். இங்கு சனி காலில் சலங்கை கட்டிக்கொண்டு நிற்கின்றார். அதாவது உச்சம் பெற்ற சனியாக இருக்கிறார்.

எனவே தான் திருமணம் காலதாமதம் ஆகிறது. முதல் 12 வருடம் நடந்த புதன் திசை, பாலிய பிராயத்தில் கழிந்து விடுகிறது. பின்னர் 19 வயது வரை நடந்த கேது திசை திருமணத்திற்கு உகந்த காலம் அல்ல. பின்வரும் சுக்கிரன் திசை கொடுக்க அதிகாரம் பெற்றவர் ஆவார் காரணம். சுக்கிரன் இரண்டாம் இடத்தை அதிபதியாகவும் வருவதுதான்.

எனவே இந்த சுக்கிர தசையில் அவருக்கு திருமணம் நடக்கும் என்றாலும்தற்போது நடந்து கொண்டிருப்பது சுக்கிரன் திசையில் புதன் புத்தி ஆகும். இந்த புதன் ஒன்பதாமிடத்தில் குருவுடன் சேர்ந்து இருப்பது கொடுத்துவிடும் என்றாலும், புதன் வக்கிரம் ஆவதால் திருமணத்தை நடத்த வழி இல்லை. அடுத்து வரும் கேது புத்தியும் எட்டில் அமைவதால் திருமணம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே இதன் பின்னர் வரும் சூரியன் திசையில் சந்திரன் புத்தியில் 2023 ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு பின்னால் 2024 பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

திருமணத்தைப் பொருத்தவரை அவருக்கு காலதாமதம் ஆவது தான் தவிர திருமணம் இல்லை என்ற பலன் கிடையாது. ஆட்சி பெற்ற நிலையில் நிற்க கூடிய சுக்கிரன் தன்னுடன் உச்ச சனி சேர்க்கை வருவதால் தனது திசையில் திருமணம் நடத்த முடியவில்லை என்பதே உண்மை. இங்கு சுக்கிரனை விட சனி பகவானே பலன் தருவதில் முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்