மார்கழி மாதம்
ஒவ்வொரு ஆண்டும் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாதம் மார்கழி மாதம். மார்கழி மாதம் தெய்வங்களுக்கு உகந்த மாதம். கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார்.
மார்கழி என்பது நான்கு முக்கு மாதங்களில் ஒன்று என்பார்கள். சூரியன் மிதுன ராசியில் இருப்பது ஆனி மாதம், கன்னி ராசியில் சூரியன் இருந்தால் புரட்டாசி மாதம். தனுசு ராசியில் சூரியன் இருந்தால் மார்கழி மாதம். மீன ராசியில் சூரியன் இருந்தால் கூனி மாதம் அதாவது பங்குனி மாதம் என்பார்கள்.
இந்த முக்கு மாதங்களில் வாஸ்து நாட்கள் கிடையாது. இதன் காரணமாக இந்த நான்கு மாதங்களில் தெய்வங்களை வழிபடக் கூடிய மிக உண்ணத மாதமாகும்.
Also Read: மார்கழி மாத ராசி பலன் 2019
யோகம் அதிகம்
மார்கழி மாதத்தில் நாம் செய்யக் கூடிய வழிபாட்டின் போது கிடைக்கக் கூடிய பலனை விட, இந்த மார்கழி மாதத்தில் செய்யக்கூடிய வழிபாட்டின் போது மிக அதிக பலன்கள் கிடைக்கும் என நம் முன்னோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிலும் இந்த மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இறைவனை வழிபடும் போது மிக நல்ல சக்தி, நேர்மறை சிந்தனை, பலன்கள் கிடைக்கும். இதனால் நமக்கு ஏற்படும் தீமைகள், துன்பங்கள் நீங்கும்.
Also Read: 2020ல் இந்த நான்கு ராசிகள் ராஜா தான்! - உங்க ராசி இதில் இருக்கா...?
மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?
மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?
மார்கழி மாதத்தில் அதாவது சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் போது பிறந்தவர்கள், பொதுவாக தந்தையின் ஒத்த உருவம் அல்லது உள்ள அமைப்பையோ பிரதிபலிப்பவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தந்தையார் என்ன படித்துள்ளாரோ அல்லது தொழில் செய்து கொண்டிருக்கின்றாரோ, அது சார்ந்த தொழில், வியாபாரம் செய்பவர்களாக இருப்பார்கள்.இவர்கள் முன்னோர்களின் ஆசியைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
குணமும், சிந்தனையும்...
இறைவன் சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த, முன்னோர்கள் சொல்லி வைத்து சென்ற நல்ல விஷயங்களை பின்பற்றுபவர்களாக, குறிப்பாக மிகவும் பழையான விஷயங்களில் நாட்டம் உடையவர்களாகவும், அதில் நாட்டமுடையவர்களாகவும் இருப்பார்கள்.
மிகவும் நேர்மையானவர்களாகவும், குறுக்கு வழியில் செல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் சித்தர்களின் வழியை பின்பற்றுபவர்களாகவும். சித்தர்களின் எண்ணங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அடிக்கடி சித்தர்களின் சமாதி, ஆலயங்களுக்கு சென்று வருவது நல்லது.பழமையான பாடல் பெற்ற சிவன் ஆலயங்களுக்கு சென்று வருவது மிக நல்ல பலனை தரும்.
Also Read: திருப்பாவை பாடி திருமாலை மணந்து கொண்ட ஆண்டாளின் பக்தி சிறப்புகள்..
மறு பிறப்பு
இவர்கள் எண்ணம், குறிக்கோள் எல்லாம் வானத்தில் கோட்டை கட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். அது போல் தான் பயன்பெற்றதைப் போல அடுத்தவர்களும் பயனடைய வேண்டும் என நினைப்பார்கள்.
சின்ன சின்ன விஷயங்களில் கூட சற்று கோபப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திருமணத்திற்கு பின்னர் மறு பிறப்பு அதாவது திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கை என்பது அமையும். இவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் மூலம் பல யோகம் வந்து சேரும்.
ராகு - கேது தோஷம் கிடையாது
மார்கழி மாதத்தில் பிறக்கும் ஒருவருக்கு ராகு - கேது தோஷம் கிடையாது.
மிக முக்கிய விஷயம் என்னவென்றால் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு -கேது தோஷம் கிடையாது. சூரியன் மூலம் நட்சத்திரத்தின் சாரம் பெற்று கேதுவின் சாரம் பெற்று பிறப்பதால் இவர்களுக்கு ராகு - கேது தோஷம் கிடையாது. அது யோகமாக மாறும்.
யோகம் உண்டாக
இவர்கள் செல்ல வேண்டிய கோயில்களில் மிக முக்கியமானவை, குருவின் அதிதேவதை பிரம்மா.
அதனால் திருப்பட்டூரில் இருக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு சென்று வந்தால் மிக யோகமானதாக, வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை எளிதாக வென்றெடுத்து வருவார்கள்.
அடுத்து திருச்செந்தூர் அல்லது பழனி சென்று வருவது மிக நல்ல யோக பலன்களை தரும்.
Also Read: அச்சன் கோயில் ஆபரண பெட்டியும், கோயிலின் ரகசியமும்