ஆப்நகரம்

Tamil Puthandu: இந்த ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஏற்றம் தான்!

தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில், ஏற்றம் உண்டாகும் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Apr 2019, 2:34 pm
தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில், ஏற்றம் உண்டாகும் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.
Samayam Tamil Kanni


மங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு, 14.4.2019 அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது.

இந்த விகாரி புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை கொடுத்துள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.

கன்னி ராசி

கணவன் மனைவி உறவு அந்நியோன்யமாக இருந்து வரும். குழந்தைகளால் பேரும், புகழும், மன நிம்மதியும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும் சிறப்பான மதிப்பெண்கள் பெறுவர். அரசு மற்றும் தனியார் துறையில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கப்பெறும் காலமாகும். தன லாபமும், பூமி லாபமும் கொடுக்கும் காலம். புது வீடு கட்டுவது, புது தொழில் ஆரம்பிப்பது என்று வாழ்க்கையில் ஏற்றத்தைத் தரும் காலம் ஆகும்.

கட்டிடத் துறையில் பங்கு மார்க்கெட் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை தரும் காலமாகும். குறிப்பாக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய முயற்சி வெற்றியடையும் காலமாகும். வியாபாரத் துறையில் புதிய யுக்திகளையும் புதிய பொருளாதாரத்தையும் கொண்டு தனது வியாபாரத்தைப் பெருக்கும் காலம் ஆகும்.

ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ்,
மொபைல் எண்: 9842108500

அடுத்த செய்தி

டிரெண்டிங்