ஆப்நகரம்

Tamil Puthandu: தமிழ் புத்தாண்டில் ரிஷபம் ராசிக்காரர்கள் கடன்பட வாய்ப்புண்டு!

பிறக்கும் தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் ரிஷபம் ராசிக்காரர்கள் கடன் பட வாய்ப்பு உள்ளது என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.

Samayam Tamil 13 Apr 2019, 12:55 pm
பிறக்கும் தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் ரிஷபம் ராசிக்காரர்கள் கடன் பட வாய்ப்பு உள்ளது என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.
Samayam Tamil rishabam


மங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு, 14.4.2019 அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது.

இந்த விகாரி புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை கொடுத்துள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.

Tamil Puthandu: விகாரி வருடத்தில் மேஷம் ராசிக்கு பிரபலமாகும் வாய்ப்பு அமையும்!

ரிஷபம் ராசி

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் சிறுசிறு சச்சரவுகளுக்கு பின் அமைதி கிடைக்கும். ஒற்றுமை வரும் கடன்பட்டு சுப நிகழ்ச்சிகளை குடும்பத்தில் நடத்த வேண்டி வரலாம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். கலைத்துறையினர் மிகுந்த புகழை பெறும் காலம் என்றாலும் புகழ் அடையும் அளவிற்கு போதிய வருமானம் இருப்பது கடினமே. சேமிப்பு குறைந்து கடன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ்,
மொபைல் எண்: 9842108500

அடுத்த செய்தி

டிரெண்டிங்