ஆப்நகரம்

சந்திர கிரகணம் 2021 எப்போது?: கிரகணம் ஏற்படும் நேரம் மற்றும் எங்கெல்லாம் பார்க்கலாம்

ஜோதிட பார்வையில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஆண்டின் முதல் சந்திர கிரகணம். இந்த முறை மே 26ம் தேதி சித்திரை பெளர்ணமி, புதன் கிழமை அன்று ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவின் சில பகுதிகளில் காணலாம்.

Samayam Tamil 12 May 2021, 1:45 pm

ஹைலைட்ஸ்:

  • ஜோதிட பார்வையில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.
  • இந்த முறை மே 26ம் தேதி சித்திரை பெளர்ணமி, புதன் கிழமை அன்று ஏற்படுகிறது.
  • கிரகணத்தின் போது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Chandra Grahan
சந்திர கிரகணம் என்றால் என்ன ?
பொதுவாக சந்திர கிரகணம் பெளர்ணமி தினத்தில் வரும். ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏற்படும்.
சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது பூமியின் நிழல், சந்திரனின் மீது விழுவதால் சந்திர கிரகண நிகழ்வு ஏற்படுகிறது.

சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது? - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...

சந்திர கிரகணம் ஏற்படும் நேரம் ?
2021ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 26ம் தேதி புதன் கிழமை ஏற்படுகிறது.

இந்தியாவில் 26ம் தேதி மதியம் 2.17 மணிக்கு தொடங்கி இரவு 7.19 மணி வரை மிக நீண்ட சந்திர கிரகண நிகழ்வு நடக்கிறது.
இந்த நிகழ்வின் போது 101.6 சதவீதம் சந்திரன் முழுமையாக மறையும்.

இரவும் பகலும் திறந்திருப்பதோடு, கிரகணத்தின் போது கூட மூடப்படாத கோயில் எங்கு உள்ளது தெரியுமா?... அட நம்ம ஊருல தாங்க

இந்த நிகழ்வின் போது இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் பார்க்கப்படும். இருப்பினும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, வட ஆப்ரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா நாடுகள், தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் ஆர்டிக் பகுதியில் இந்த அற்புத நிகழ்வைப் பார்க்க முடியும்.

சந்திர கிரகணவகைகள் எத்தனை தெரியுமா?

2021ல் வரக்கூடிய மற்ற கிரகணங்கள் :
மே 26: முழு சந்திர கிரகணம்
ஜூன் 10: முழு சூரிய கிரகணம்
நவம்பர் 19: பகுதி சந்திர கிரகணம்
டிசம்பர் 4: முழு சூரிய கிரகணம்

இந்து சமய நம்பிக்கைகளின்படி, கிரகணத்தின் போது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, விரதத்தை கடைப்பிடிப்பது அவசியம். சுப வேலைகள் செய்யாமல், இறை வழிபாடு மட்டும் செய்வது அவசியம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்