ஒன்றாக வரும் சந்திர கிரகணம் மற்றும் குரு பூர்ணிமா
ஒன்றாக வரும் சந்திர கிரகணம் மற்றும் குரு பூர்ணிமா
ஒவ்வொரு ஆண்டும் வரக் கூடிய ஆனி மாதத்தில் வரக் கூடிய பெளர்ணமி நாளில் குரு பூர்ணிமாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். குரு பூர்ணிமா கொண்டாடப்படும் ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரும் பெளர்ணமி தினத்தில் தான் சந்திர கிரகணம் நிகழ்வு நடக்க உள்ளது.
இடி சந்திர கிரகணம் தெரியுமா? - சந்திர கிரகண நிகழ்வை பார்க்க முடியுமா?
சூரியன் சந்திரன் இடையே பூமி வருவதை சந்திர கிரகணம் எனப்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தின் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் தெளிவற்ற கிரகணமாக தென்படும். மேலும் அந்த கிரகணத்தின் சிறப்பைப் பார்ப்போம்.
ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் : முழு விபரம் இதோ!
சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
ஜூலை 5ல் நடக்கும் சந்திர கிரகணம் ஏற்படக் கூடிய நேரம் - காலை 8.38 மணி
சந்திர கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் - காலை 9.59 மணிக்கு
சந்திர கிரகணம் முடியும் நேரம் -11.21 மணிக்கு
சந்திர கிரகணத்தால் மிக நல்ல பலன்களைப் பெறப்போகும் ராசிகள் யார் தெரியுமா?
கிரகணம் சுமார் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் 24 விநாடிகள் நிகழ உள்ளது.
பெனும்ப்ரல் சந்திர கிரகணத்தின் நேரம் - 0.35 விநாடிகள்
காலையில் கிரகணம் ஏற்படுவதால் இந்தியாவில் கிரகணத்தைப் பார்க்க முடியாது. சந்திர கிரகணம் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் தெரியும்.
சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது? - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...
தனுசு ராசியில் சந்திர கிரகணம் நிகழ்கிறது
தனுசில் சந்திர கிரகணம் நிகழும்
காலை 8.38 மணிக்கு தனுசு ராசியில் உள்ள பூராடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணத்தின் காரணமாகத் தனுசு ராசியினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
பஞ்சாங்க கூற்றுப்படி இந்தியாவில் தெரியக் கூடிய கிரகணத்தின் போது ஏற்படக் கூடிய ராசி மீதான தாக்கத்தைப் போல, இந்த முறை எந்த தாக்கமோ, ஏற்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை என ஆன்மிகம், அறிவியல் சொல்லும் உண்மைகள் இதோ!
மீண்டும் சேர்ந்து வரும் சந்திர கிரகணம் மற்றும் குரு பூர்ணிமா
மீண்டும் சேர்ந்து வரும் சந்திர கிரகணம் மற்றும் குரு பூர்ணிமா
முன்னதாக 2018 ஆம் ஆண்டில், ஜூலை 27 ஆம் தேதியிலும், 2019 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியிலும் குரு பூர்ணிமாவும் சந்திர கிரகணமும் ஒன்றாக இருந்தன. இந்தாண்டும் குரு பூர்ணிமா வரக்கூடிய ஜூலை 5 ஆம் தேதியும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
பெனும்ப்ரல் சந்திர கிரகணம், ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன?
குரு பூர்ணிமாவில் இந்த புனிதமான வேலையைச் செய்யுங்கள்
குரு பூர்ணிமாவில் இந்த புனிதமான வேலையைச் செய்யுங்கள்
மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள்.பிறப்பை கொடுத்த பெற்றோர்களை அடுத்து வருபவர் குரு. கல்வியைக் கொடுத்து ஒருவரின் வாழ்வின் அனைத்து நல்வினைகளைக் கொடுக்கக் கூடியவர் குரு. அவரை வணங்கக்கூடிய மிக புண்ணியமான நாள் தான் குரு பூர்ணிமா.
சந்திர கிரகணத்தால் ஒவ்வொரு ராசியும் பெற இருக்கும் பலன்கள் என்ன தெரியுமா?
இந்த அற்புதமான தினத்தில் குருவுக்கெல்லாம் குருவான தட்சிணாமூர்த்தி, முருகப் பெருமான், வியாசர் போன்ற குருக்களை வணங்க வேண்டிய மிக முக்கிய நாள்.குரு பூர்ணிமா என்றால் என்ன? - முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் தெரியுமா?
புனித இடத்தில் வழிபாடு
புனித இடத்தில் வழிபாடு
பொதுவாக கிரகண நாளில் எந்த ஒரு நல்ல செயலையும் செய்வது கிடையாது. இருப்பினும் இந்த குரு பூர்ணிமா தினத்தில் சந்திர கிரகணம் வந்தாலும், கிரகணம் முடிந்த பின்னர் வீட்டில் குளித்து சுத்தம் செய்துவிட்டு புனித ஸ்தலங்கள், ஆறு, நதிகளில் சென்று வழிபடுவதை வழக்கமாக இருக்கிறது.
பிரதோஷ நிகழ்வை எத்தனை தடவை பார்த்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?
சந்திர கிரகணத்தின் விளைவுகள்
சந்திர கிரகணத்தின் விளைவுகள்
ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஒரு மாத காலத்திற்குள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகணங்கள் வருவது நல்லதல்ல என கருதப்படுகிறது. தற்போது ஜூன் 5 முதல் ஜூலை 5 வரையிலான மூன்றாவது கிரகணம் நிகழ்கிறது. இதன் விளைவாக, கிரகங்களின் நிலையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படக்கூடும் என்று நம்பப்படுகிறது. அதன் விளைவு காரணமாக, மக்கள் கடுமையான இயற்கை பேரழிவை சந்திக்க நேரிடும் என்று நம்பப்படுகிறது. பெரிய நாடுகளுக்கு இடையிலான பகை, கருத்து வேறுபாடு இன்னும் பல பிரச்னைகள் உண்டாகலாம். முக்கியமாக மக்கள் நீண்ட காலமாக பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பிரதோஷ நிகழ்வை எத்தனை தடவை பார்த்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?