ஜூன் மாதத்தில் நடக்க உள்ள சில கிரக பெயர்ச்சி மற்றும் கிரக அமைப்பின் காரணமாக கொரோனாவால் ஏற்படக்கூடிய பிரச்சினையைத் தாண்டி, சில இயற்கை பேரிடரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மறுபுறம் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கொரோனா ஜூன் மாதத்தில் குறைந்து உயிரிழப்புகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிரகங்கள் ஜூன் மாதத்தில் மாறுகின்றன
இந்த கிரகங்கள் ஜூன் மாதத்தில் மாறுகின்றன
செவ்வாய், புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தாங்கள் இருக்கக்கூடிய இடத்திலிருந்து மாற்றத்தை சந்திக்க உள்ளன. மாத தொடக்கத்தில் மிதுனத்தில் இருக்கும் செவ்வாய் கடக ராசிக்கும். அதன் பின்னர் ஜூன் 3ல் புதன் பகவான் ரிஷப ராசிக்கு வக்ர பெயர்ச்சி ஆகிறார். அதே போல ஜூன் 15ல் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். ஜூன் 22ல் சுக்கிரன் கடக ராசிக்கு மாறுவார்.
கடகத்திற்கு மாறும் செவ்வாய் :
ஜூன் 2ம் தேதி கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி ஆவதால் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எப்போதும் மாறிவரும் காலநிலையால் மக்கள் கலங்கக்கூடும். இந்த நேரத்தில், எதிரி நாடுகள் எல்லையில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். முதலாளிகள் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள முடியும்.
மனரீதியாக பலவீனமான மற்றும் நிலையற்ற மனநிலை கொண்ட ராசிகள் யார் தெரியுமா?
வக்ர கதி அடையும் புதன் பகவான் :
வக்ர பெயர்ச்சி அடையும் கிரகங்களில் புதனும் ஒன்று. வக்ர கதியாக மிதுனம் மற்றும் ரிஷபத்திற்கு செல்லும் புதனால் பொருளாதார ரீதியாக இந்தியா சில சாதகமான பலன்களைப் பெறமுடியும். நிதி நெருக்கடியைப் போக்க அரசாங்கம் புதிய திட்டங்களை உருவாக்கும். வணிகத்தில் ஓரளவு நல்ல முன்னேற்றம், மாற்றத்தை சந்திக்க முடியும். தொழில், வியாபாரத்தில் நேர்மறையாக, இயல்பு நிலை திரும்ப வாய்ப்புள்ளது.
சந்திர கிரகணம் 2021 கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக செய்யக் கூடாதது, செய்ய வேண்டியது என்ன?
மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் சூரியன் :
ஜூன் 15ல், புதன் அதிபதியாக இருக்கும் மிதுன ராசியில் சூரியன் பயணிக்கிறார். இதன் காரணமாக புதன் பலம் கொண்டவர்களுக்குப் பேச்சில் தெளிவு ஏற்படும். வீடு, மனை வாங்குதல் மற்றும் செல்வம் அதிகரிக்கும்.
சனி 5ம் வீட்டில் இருப்பதால் வெளிநாட்டு வணிகம் அதிகரிக்கக்கூடும். இந்த நேரம் மாணவர்களுக்கு ஏற்ற காலமாக இருக்கும்.
திருமண தம்பதிகள் முதலிரவுக்கு முன் வணங்க வேண்டிய திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்
குரு தரும் பலன்
கும்ப ராசியில் அதிசாரமாக இருக்கும் குரு பகவானால் தனி மனிதருக்கும், நாட்டிற்கும், சமூகத்திற்கும் சாதகமானதாக இருக்காது. எதிர்பாராத சில சவால்களை சந்திக்க நேரிடும். அதிலிருந்து வெளியேற நேரம் ஆகலாம். இந்த நேரத்தில் மக்கள் தங்கள் உடல்நிலை குறித்து கவனமாக இருக்க வேண்டும். குருவின் அதிசார பெயர்ச்சியில் சாதகமற்ற நேரங்களில் அரசாங்கம் சரியான முடிவை எடுத்தால் நிலைமையை சரிசெய்ய முடியும். இல்லையெனில் கொரோனா தொற்றுநோய் மேலும் பரவக் கூடும்.
சிவபெருமானின் பிறப்பு மற்றும் ஈசனின் காதல் கதை
கடகத்தில் சுக்கிரன்
ஜூன் 22 வரை மிதுனத்திலும், அதன்பின்னர் கடகத்திற்கு மாறும் சுக்கிரனால் நாட்டின் பல பகுதிகளில் அதிக கன மழை பெய்யக்கூடும், வெள்ளம் ஏற்படலாம். கடக ராசியினருக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் பாலியல் ஆர்வம் அதிகரிக்கக்கூடும் மற்றும் உடல் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வேலை மன அழுத்தம், பதற்றம் அதிகரிக்கும்.
திருப்பதி ஏழுமலையானை அருகில் நின்று நிதானமாக தரிசிக்க வேண்டுமா? - திருப்பதி காவாளம் உண்டியல் அதிசயம்
உலகளாவிய தாக்கம்
ஜூன் மாதத்தில் கிரகங்களின் இயக்கம் உலகளவில் சில சலசலப்பை ஏற்படுத்தக்கூடும். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான நிலைமை, படிப்படியாக அமைதியாக வாய்ப்புள்ளது, செவ்வாய் கிரகம் கடகத்தில் சஞ்சாரம் செய்வதால் ஆசியா கண்டத்தின் பல நாடுகளில், கனமழை மற்றும் புயல்களால் சாதாரண வாழ்க்கை பாதிப்பு அடைய வாய்ப்பும் உள்ளது.
முக்கண் சிவனின் மகள் அசோக சுந்தரியின் பிறப்பு : ராவணன் கைலாஷ் மலையை உலுக்கிய கதை
எல்லை மோதல்களை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் காணலாம்.
குருவின் அதிசார நிலையால் சில நாடுகளுக்கு நல்லதாக இருக்கலாம், பல நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆர்வம் காட்டுவர். ஒட்டுமொத்தமாக, உலகளவில், இந்த மாதம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கலாம்.