ஆப்நகரம்

நவகிரகங்களின் பார்வை எந்த இடத்தில் பார்க்கும் அதற்கான பலன்கள்

ஜோதிட பலன் கூறுதலின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது கிரங்களின் பார்வை பலன்கள். இங்கு ஒவ்வொரு கிரகங்களின் பார்வை எந்த வீட்டில் விழுந்து அதற்கான நற்பலன்கள் அல்லது கெடு பலன்கள் தரும் என்பதை பார்ப்போம்.

Samayam Tamil 27 Mar 2020, 9:02 pm
ஜோதிடத்தின் முக்கிய கருப்பொருளாக இருப்பவர்கள் 9 கிரகங்கள் எனும் நவகிரகங்கள். நாம் பிறக்கும் நேரத்தில் இவர்களின் நிலையை வைத்து தான் நம் ஜாதகம் கணிக்கப்படுகின்றது. அதன் பின்னர் நாம் ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து பலன் அறிய செல்லும் போது தற்போதுள்ள கிரக நிலைகளும், உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையால் தற்போது நடக்கும் தசா புத்தி வைத்து பலன்கள் சொல்வார்.
Samayam Tamil Navagraha Paarvai
Navagraha Paarvai



அப்படி ஜோதிடர் சொல்லும் பலன்கள் அனைத்தும் தற்போது இருக்கும் கிரக நிலையும், அந்தந்த கிரகங்களின் பார்வை பலன்களை வைத்து தான்.
அனைத்து கிரகங்களுக்கு ஏழாம் பார்வை என்ற அமைப்பு பொதுவாக உண்டு. சில கிரகங்களுக்கு சிறப்பு பார்வைகளும் உண்டு. 9 கிரகங்களின் பார்வை என்ன என்பதை பார்ப்போம்.

9 கிரகங்களின் பார்வை
குரு பகவான் (வியாழன்) - 9, 5ம் பார்வை சிறப்பு பார்வையும், 7ம் பொது பார்வையும் உண்டு.
சனி - 3,7,10ம் பார்வைகள் சிறப்பு பார்வை, 7 பொது பார்வை

செவ்வாய் - 4,8 சிறப்பு பார்வை, 7 பொது பார்வை

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? - அதற்கான பரிகாரமும், யாருக்கு தோஷம் இருக்கும்?

இதைத் தவிர முக்கிய நான்கு கிரகங்களான சூரியன், சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோருக்கு எந்த சிறப்பு பார்வையும் கிடையாது. வெறும் 7ம் பார்வை மட்டும் தான் உண்டு.

அதைத் தவிர நிழல் கிரகங்களான ராகு - கேது ஆகிய இரு கிரகங்களுக்குச் சிறப்பு பார்வைகள் இல்லை.
இந்த ஒன்பது கிரகங்களின் பார்வையை வைத்து தான் பார்வை பலன் சொல்லப்படுகிறது. இவை தான் ஜாதகரின் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டதை தீர்மானிப்பதாக ஜோதிட நிபுணர்கள் நம்புகின்றனர்.

2020 அதிசார குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்ட யோகம் யாருக்கு அமையும் தெரியுமா?
குரு, சனி, செவ்வாய்க்குச் சிறப்பு பார்வை உள்ளதாலும், குரு, சனி ஆகிய இரு கிரகங்கள் ஒரு ராசியில் நீண்ட காலம் நின்று பார்வை பலன் தருவதால் இந்த கிரகங்களின் பெயர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்